LIGER Mobile Logo Top
Tiruchitrambalam Mobile Logo Top
Viruman Mobiile Logo top

Games of Thrones-ஐ ஒப்பிட்டு பிரக்ஞானந்தாவை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் 'கேப்ஷன்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Games of Thrones-ஐ ஒப்பிட்டு பிரக்ஞானந்தாவை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் 'கேப்ஷன்'!!

Also Read | "அவர்கிட்ட இருந்து இது ஒன்ன மட்டும் கத்துக்கோங்க".. மறைந்த முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்து ஆனந்த் மஹிந்திரா உருக்கம்..!

அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.

anand mahindra appreciates Praggnanandhaa in recent tweet

அந்த வகையில், தற்போது இந்தியாவின் இளம் தமிழக செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை குறித்து, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள பதிவு, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டி தொடரின் 7 ஆவது சுற்றில், உலக சாம்பியனான கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். போட்டி 2 - 2 என்ற கணக்கில் டிராவில் முடிந்த நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி பட்டையை கிளப்பி இருந்தார் பிரக்ஞானந்தா.

anand mahindra appreciates Praggnanandhaa in recent tweet

இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில், தொடரின் வெற்றியாளராக கார்ல்சன் அறிவிக்கப்பட்டார். மேலும், இரண்டாவது இடத்தையும் பிரக்ஞானந்தா பிடித்திருந்தார். இருந்த போதும், ஐந்து முறை உலக சாம்பியனான கார்ல்சனை தோற்கடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை உலக அளவில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவும், பிரக்ஞானந்தாவை பாராட்டி அவரை Games of Thrones-உடன் ஒப்பிட்டு, அசத்தலான கருத்து ஒன்றை தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். "தீவிரமான முகத்துடன் இருக்கும் இவரை பாருங்கள். செஸ் போட்டி என்பது, Games of Thrones என்றால், விரைவில் அதன் சிம்மாசனத்தில் ஒரு புதிய ஆக்கிரமிப்பாளர் வருவார். (அவரது பெயரை எவ்வாறு சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்)" என ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

anand mahindra appreciates Praggnanandhaa in recent tweet

ஏற்கனவே, அடுத்தடுத்து பல வெற்றிகளை குவித்து, செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், அவர் விரைவில் நம்பர்1 சிம்மாசனத்தில் அமர்வார் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்து, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | 'Vacation க்கு இங்க போகணும்னு ஆசை".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த அட்டகாசமான வீடியோ.. அடடா இதான் காரணமா.?

ANAND MAHINDRA, PRAGGNANANDHAA, ANAND MAHINDRA APPRECIATES PRAGGNANANDHAA, RAMESHBABU PRAGGNANANDHAA

மற்ற செய்திகள்