ஒரு 'மகாராஜா' மாதிரி 'ஃபீல்' ஆச்சு...! 'ப்ளைட்ல ஏறிட்டு உள்ள பாக்குறேன், பயங்கர ஷாக்...' - 'ஏர் இந்தியா' விமானத்தில் நடந்த சுவாரஸ்யம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தொழிலதிபர் ஒருவர் இந்தியாவில் இருந்து தன்னந்தனியாக ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து துபாய் சென்றுள்ளார்.

ஒரு 'மகாராஜா' மாதிரி 'ஃபீல்' ஆச்சு...! 'ப்ளைட்ல ஏறிட்டு உள்ள பாக்குறேன், பயங்கர ஷாக்...' - 'ஏர் இந்தியா' விமானத்தில் நடந்த சுவாரஸ்யம்...!

எஸ்.பி.சிங் ஓபராய் என்ற தொழிலதிபர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து துபாய் செல்ல விமான டிக்கெட்டை புக்கிங் செய்துள்ளார்.

விமானத்தில் ஏறிய பின் தான், அந்த விமானத்தில் அவர் மட்டுமே உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்த எஸ்.பி.சிங் ஓபராய், முதலில் மகாராஜாவை போல உணர்ந்ததாக தெரிவித்தார்.

என்னதான் மகாராஜா என்றாலும் சிறிது நேரத்திற்கு பின்பு யாரும் இல்லாமல் பயணித்தால் தனக்கு சலிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலில் ஒருவர் மட்டுமே துபாய்க்கு செல்ல டிக்கெட் பெற்றதால் எஸ்.பி.சிங் ஓபராய் அவர்களின் டிக்கெட்டை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்தது. ஆனால், மத்திய விமானப் போக்குவரத்து துறையின் தலையிட்டால், அவரை மட்டுமே அழைத்துக் கொண்டு ஏர் இந்தியா விமானம் துபாய் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மற்ற செய்திகள்