VIDEO: “அவரு கத்துற கத்துல.. கண்டிப்பா நம்மள பேச விடமாட்டார்னு தெரிஞ்சுது!”.. விவாத நேரலையில் ‘கஸ்தூரி’ செய்த தரமான ‘சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை, நெப்போடிசம் உள்ளிட்டவை பற்றி புகார் சொல்லி பரபரப்பை கிளப்பிய நடிகை கங்கனா ரனாவத் பற்றி ரிபப்ளிக் டி.வி.யில் அர்னாப் கோஸ்வாமி முன்னிலையில் நேரலை விவாதம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரியும் பங்கேற்றிருந்தார்.

VIDEO: “அவரு கத்துற கத்துல.. கண்டிப்பா நம்மள பேச விடமாட்டார்னு தெரிஞ்சுது!”.. விவாத நேரலையில் ‘கஸ்தூரி’ செய்த தரமான ‘சம்பவம்’!

இந்த நிகழ்ச்சியின் போது கஸ்தூரி கருத்து சொல்ல எவ்வளவோ முயற்சித்தும், அர்னாப் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவருக்கே உரிய பாணியில் பேசிக் கொண்டிருந்தார்.  “எப்படியும் பேசுறத நீங்க கேக்கப் போறதில்ல. நாம சாப்பட்டுருவோம்” என நினைத்த கஸ்தூரி, நேரலையின்போதே உணவு சாப்பிட

ஆரம்பித்து விட்டார். இதுபற்றி பேசிய கஸ்தூரி, “நெறியாளர் அர்னாப் கோவ்சாமி எப்போதுமே நேர்காணல்களின்போது பாதி நேரத்துக்கும் மேல் அவரே பேசிக்கொண்டிருப்பார்.  நான் அவரை ஹைப்பர் மோடில் 60 நிமிடங்கள் பார்த்தேன். நிச்சயமாக நம்மளயும் பேச விடமாட்டார் என தெரிந்தது. அதான் மதிய உணவை சாப்பிட தொடங்கிட்டேன். அதேசமயம், ஸ்கைப் கணக்கை லாக்-அவுட் பண்ண மறந்துட்டேன், அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன். இதில் அவமரியாதைக்கென்று எதையும் செய்யவில்லை”

என்று தெரிவித்தார்.  இதனிடையே அவருடைய ட்விட்டரில் ஒருவர்,  “எனக்கு ஒரு பெரிய டவுட், நீங்க சாப்பிட்டது சேமியாவா ?” என்று கேட்க,  அதற்கு ரிப்ளை செய்த கஸ்தூரி,  “இல்ல.. நான் சாப்ட்டது பொங்கல், அப்போ தானே  அந்த பக்கம் கத்திட்டு இருந்த அர்னாப் சத்தத்தை மறந்து கொஞ்சம் தூங்கவாச்சும் முடியும்” என்று

பதில் அளித்தார். அதன் பின்பு மீண்டும் அர்னாபுடன் இன்னொரு நேரலை விவாதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த கஸ்தூரி,

அந்த நேரலை முடிந்ததும், “இந்த முறை சாப்டல, பாதியில எழுந்து போகல, கிட்டத்தட்ட ஊமையாயிட்டேன்.. நடுவுல ஒன்னு ரெண்டு வார்த்த பேசினேன்”

என்று ட்வீட் போட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்