'மேட்ரிமோனியல் மூலம் வந்த ’ஐடி பெண்’ வரன்'... 'ச்சே, கட்டிக்கப்போற பொண்ணு ஆசப்பட்டு கேக்குறா'... இளைஞரின் வாழ்க்கையை புரட்டி போட்ட வீடியோ கால்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேட்ரிமோனியல் மூலமாக வந்த வரன் இளைஞரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.

'மேட்ரிமோனியல் மூலம் வந்த ’ஐடி பெண்’ வரன்'... 'ச்சே, கட்டிக்கப்போற பொண்ணு ஆசப்பட்டு கேக்குறா'... இளைஞரின் வாழ்க்கையை புரட்டி போட்ட வீடியோ கால்!

பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் அம்பித் குமார் மிஸ்ரா. இவர் திருமணத்திற்கு வரன் தேடியுள்ளார். அப்போது மேட்ரிமோனியல் வெப்சைட் ஒன்றில் ஷ்ரேயா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் தான் ஐடி துறையில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் தங்களின் மொபைல் எண்ணைப் பரிமாறிக் கொண்டு பேசத் தொடங்கியுள்ளார்கள். அப்போது அந்த பெண், உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஷ்ரேயாவிடம் இருந்து வந்த இந்த பதிலால் மகிழ்ச்சி அம்பித் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் ஷ்ரேயா திடீரென வீடியோ காலில் அம்பித்தை அழைத்துள்ளார். இதனால் திக்குமுக்காடிப் போன அம்பித் ஷ்ரேயாவோடு பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்தப் பெண் திடீரென தன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பாராத அம்பித் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் நீயும் என்னை போல நிற்க வேண்டும் என அந்த பெண் கூற, அம்பித் குமாரும் சற்றும் யோசிக்காமல் அவ்வாறே நின்றுள்ளார். திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தானே என நினைத்த அம்பித் குமாருக்கு அதன்பிறகு தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எதிர்முனையிலிருந்த ஷ்ரேயா ''மரியாதையாக ஒரு லட்சம் பணம் கொடு இல்லையேல் உன் நிர்வாண வீடியோவை வைரலாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து ஒரு லட்சத்திற்குப் பதிலாக 20,000 கொடுத்துள்ளார் அம்பித். ஆனாலும் இன்னும் பணம் வேண்டும் என அவர் மிரட்ட, காவல்துறையின் உதவியை அவர் நாடியுள்ளார். தற்போது ஷ்ரேயா என்ற பெண் மீது மிரட்டல் மற்றும் ஏமாற்றுதல், மோசடி புகார் அளித்துள்ளதாக 'Bangalore Mirror' செய்தி வெளியிட்டுள்ளது. அம்பித் குமார் ஷ்ரேயாவை இதுவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்