'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள தர்காவில் பணிபுரிந்து வருபவர் சலிமுதீன். 60 வயதான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது மனைவி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி!

அவர் அளித்துள்ள புகாரில் ''கணவர் சலிமுதீன் செய்யும் கொடுமைகள் எல்லை மீறி செல்வதாகவும், தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சலிமுதீன் மீது ‘இந்திய தண்டனை சட்டம் 498ஏ’ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கவால்துறையினர் நடத்திய விசாரணையில், திருமண ஆன ஒரு மாதகாலத்தில் இருந்தே சலிமுதீன் தனது மனைவியை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. கணவரின் கொடுமைகளை சகித்து வந்த மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். முன்னதாக ‘முத்தலாக்’ மூலம் விவாகரத்து கொடுப்பது குற்றம் என்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TRIPLE TALAQ, WIFE, HUSBAND, RAJASTHAN