‘கோயில் சுவர் இடிந்து விழுந்து’.. ‘6 பேர் பலியான பரிதாபம்’.. ‘கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடந்த சோகம்’..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

‘கோயில் சுவர் இடிந்து விழுந்து’.. ‘6 பேர் பலியான பரிதாபம்’.. ‘கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் நடந்த சோகம்’..

மேற்கு வங்க மாநிலம் பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள லோக்நாத் கோயிலுக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதால் வெளியே நின்றுகொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் கோயிலுக்குள் ஓடியுள்ளனர்.

அப்போது திடீரென கோயிலின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

 

 

WESTBENGAL, KRISHNA, JANMASTAMI, CELEBRATION, TEMPLE