“1000 அடியில தங்கம் இருக்கு!”.. ‘பேராசையில் நுழைந்த 3 திருடர்கள்’.. ‘கேஜிஎஃப்-ல் நடந்த பதைபதைப்பு சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருடுவதற்கு ஒரு கும்பல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“1000 அடியில தங்கம் இருக்கு!”.. ‘பேராசையில் நுழைந்த 3 திருடர்கள்’.. ‘கேஜிஎஃப்-ல் நடந்த பதைபதைப்பு சம்பவம்’!

பெங்களூருவில் உள்ளது கோலார் தங்கச் சுரங்கம். இங்கு 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருடுவதற்கு ஒரு கும்பல் முயன்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் மீதான ஆசையில் உள்ளே நுழைந்த இந்த 3 பேர் கொண்ட கும்பல் சுரங்கத்துக்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும்.

அதனால்தான் என்னவோ உள்ளே போன சில நேரத்துக்குள் மயங்கி விழுந்து 3 பேர் கொண்ட இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் நள்ளிரவு என்பதால் முதலில் 2 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் உயிரிழந்த மீதமிருக்கும் ஒருவரின் சடலத்தை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதோடு இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.