தந்தை வாங்கிய கடனுக்காக 2 வயது மகளை ஆசிட் ஊற்றிக் கொன்ற கொடூர கும்பல்..! நெஞ்சை பதைக்க வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரப்பிரதேசத்தில் தந்தை வாங்கிய கடனுக்காக 2 வயது குழந்தை கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை வாங்கிய கடனுக்காக 2 வயது மகளை ஆசிட் ஊற்றிக் கொன்ற கொடூர கும்பல்..! நெஞ்சை பதைக்க வைத்த சம்பவம்!

அலிகார் பகுதியில் வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவரது 2 வயது குழந்தை ட்விங்கிள் கடந்த மே 31ஆம் தேதி காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு குப்பை மேட்டில் துர்நாற்றம் வீசியதால் பார்த்தபோது அதில் ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், சுயநினைவை இழந்த குழந்தையின் கையை வெட்டி, கண்ணைத் தோண்டி எடுத்து இறுதியாக அடையாளம் தெரியாமல் இருக்க உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்து குப்பையில் வீசியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸாகித் என்பவரிடம் வாங்கிய 10000 ரூபாய் கடனால் நீண்ட நாளாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்மீது சந்தேகம் இருப்பதாகக் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஸாகித் மற்றும் அவருக்கு உதவி செய்ததாக ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ட்விங்கிளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென சமூக வலைத்தலங்களில் குரல்கள் வலுத்து வருகின்றன.

JUSTICEFORTINKLESHARMA