டெல்லி போல மீண்டுமொரு சோகம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் 'மர்ம' மரணம்... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு வீட்டில் 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி போல மீண்டுமொரு சோகம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் 'மர்ம' மரணம்... வெளியான 'அதிர்ச்சி' தகவல்!

கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி புராரி பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் இருந்து போலீசார் 11 பேரின் சடலங்களை கண்டெடுத்தனர். இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவத்தில் அவர்கள் அனைவரும் கூட்டாக தற்கொலை செய்துகொண்ட விவரம் வெளியானது.

தற்போது அதேபோல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் இருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று வசித்து வந்தது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டை சேர்ந்த 11 பேர் (4 பெண்கள், 2 ஆண்கள், 5 குழந்தைகள்) மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.

அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் உயிர் பிழைத்தால் மட்டுமே இதற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீட்டில் இருந்து மருந்து வாசனை அடித்ததால் அவர்கள் அனைவரும் கூட்டாக தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இது தற்கொலையா? இல்லை கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்