‘நேருக்கு நேர் மோதிய லாரி - ஜீப்’!..‘கோயிலுக்கு போன புதுமணத் தம்பதி உட்பட ’உடல் நசுங்கி 11 பேர் பலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தானில் லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து உண்டான சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.

‘நேருக்கு நேர் மோதிய லாரி - ஜீப்’!..‘கோயிலுக்கு போன புதுமணத் தம்பதி உட்பட ’உடல் நசுங்கி 11 பேர் பலி!

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம் ஷேர்கார் உள்ள பாலோத்ரா- பாலோதி நெடுஞ்சாலையில், சென்றுகொண்டிருந்த லாரியும் எதிரே வந்த ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரிக்கு அடியில் நசுங்கிய ஜீப்பில் பயணித்த 6 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இவர்களுள் கடந்த மாதம் 27-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியரும் அடக்கம்.

இந்த தம்பதியர் ராம்தியோரா கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த கோர விபத்துக்கு பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.