‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும்போது பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்கிற உத்தரவு இந்தியாவில் உள்ளது.
![‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ! ‘நகர்ந்து நகர்ந்து ஓடும் குட்டிப்புதர்!’.. ஊரடங்கு நேரத்தில் நபர் செய்த வைரல் காரியம்.. ‘தீயாக’ பரவும் வீடியோ!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/funfacts/man-wear-thicker-dress-and-went-for-shopping-in-lockdown-video-thum.jpg)
ஆனால் வெளிநாடுகளில் அந்த சுதந்திரமும் பல நாடுகளில் இல்லை. காரணம் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அங்கு இன்னும் மோசமாக உள்ளதுதான்.
இந்நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரம், நபர் ஒருவர் புதர் போல் உடை அணிந்து, புதர்களோடு புதராக மறைந்து மறைந்து சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் குடுகுடுவென குட்டிப்புதர் ஒன்று நகர்ந்து ஓடுவது போல செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வீட்டில் இருந்தபடி நிகோலஸ் மற்றும் முர்ரே தம்பதியர் எடுத்ததோடு,
ஊரடங்கின் போது போலீஸ் கண்ணில் படாமல் மரம் போல வேடமணிந்து வெளியே செல்ல முயற்சி pic.twitter.com/URl2g3dyJG
— Polimer News (@polimernews) March 31, 2020
அந்த நபரின் செயலைப் பற்றி சிரித்துக்கொண்டே பேசிக்கொள்கின்றனர்.