RRR Others USA

இ-நாமினேஷன், ஜிஎஸ்டி ரிட்டன்ஸ்... எல்லாத்துக்கும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு!

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் தங்களது கணக்கில் இ-நாமினேஷன் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் இ-நாமினேஷன் உள்ளிட்ட பல முக்கிய அலுவல் வேலைகளுக்கும் கால அவகாசம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இ-நாமினேஷன், ஜிஎஸ்டி ரிட்டன்ஸ்... எல்லாத்துக்கும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு!

EPFO இ-நாமினேஷன் செய்ய டிசம்பர் 31-ம் தேதி 2021 வரையில் தான் கால அவகாசம் கொடுத்திருந்தது மத்திய அரசு. இதனால் பயனாளர்கள் தங்களது நாமினி தகவல்களை அப்டேட் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும், பலரும் இ-நாமினேஷன் தாக்கல் செய்ய KYC அப்டேட் செய்யவும் EPFO இணைய பக்கத்தில் குவிந்து வந்தனர்.

deadline extended for PF e-nomination, gst returns

இதனால் கடந்த ஒரு வாரமாகவே சரியாக இயங்காமல் இருந்து EPFO தளம் தற்போது முற்றிலும் பயன்படுத்த முடியாது முடங்கி உள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பயனாளர்கள் இதுகுறித்த புகார்களை பதிவு செய்து வருகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி கடசி நாள் ஆக இருக்கும் போது அரசு EPFO தளத்தை அப்டேட் செய்து பயனாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

deadline extended for PF e-nomination, gst returns

இந்த சூழலில் பிஎஃப் பயனாளர்கள் தங்களது நாமினி பெயரை அப்டேட் செய்ய கால அவகாசம் தருவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகும் நாமினி அப்டேட் செய்யலாம். மேலும், வருடாந்திர ஜிஎஸ்டி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யவதற்கும் பிப்ரவரி 28-ம் தேதி வரையில் கால அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

deadline extended for PF e-nomination, gst returns

வங்கிகளில் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது KYC-யை அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கும் தற்போது 3 மாத கால அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31, 2022 வரையில் இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

GST, பிஎஃப், பிஎஃப் இ-நாமினேஷன், ஜிஎஸ்டி, PF, PF E-NOMINATION, GST RETURNS

மற்ற செய்திகள்