'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்
By |

ஆக்சிஸ் வங்கியில் வீட்டில் இருந்து செய்யும்படியான புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா?'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு!'...

வங்கி வேலையில் விருப்பமுள்ளவர்களுக்கென ஆக்சிஸ் வங்கி ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பல துறைகளிலும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையே வழக்கமாகிவிட்ட சூழலில், ஆக்சிஸ் வங்கியும் அந்த வாய்ப்பை வழங்க உள்ளது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள Gig-a-oppurtunities மூலம் ஆண்டுக்கு 1000 திறமையானவர்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வங்கியுடன் இணைந்து பணியாற்றுமாறு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் 2 வகையான வேலைகள் வழங்கப்படுகிறது. ஒன்று நிலையான வேலை, மற்றொன்று பணி திட்டத்தை பொறுத்து குறுகிய காலத்திற்கான வேலை.

இதுகுறித்து பேசியுள்ள ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் தஹியா, "இந்த முறை மூலம் பல பணிகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இதை வழக்கமான பணிகளைப் போல திறம்பட செய்ய விரும்புகிறோம். மேலும் அடுத்த 1 ஆண்டில் இதுபோல பணிபுரிய 800 - 1,000 பேர் வரை சேர்க்கப்படுவார்கள். அலுவலக பணிகளைப் புரிய அலுவலகத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்ற நிலை மாறி தற்போது வீட்டிலிருந்தே வேலை செய்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளதால், இதன்முலம் இளைஞர்கள், அனுபவம் வாய்ந்த நடுத்தர அளவிலான தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெண்கள் உள்ளிட்ட பல நல்ல திறமைசாலிகளை வங்கி தேர்ந்தெடுக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்