VIDEO: "மறக்க முடியுமா? இந்த கூட்டணியை".. யுவன் பாடிய உருக்கமான பாடல்.. வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் நா.முத்துக்குமார் வரிகள் என்றால் அந்த பாடலுக்கு தனி ரசிகர்களே உண்டு.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா யுவன் - நா.முத்துக்குமாரின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளை பாடியுள்ளார்.

அதில், நா.முத்துக்குமார் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்துக்காக எழுதிய “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது” என தொடங்கும் பாடலில் “தீயோடு போகும் வரையில்.. தீராது இந்த தனிமை.. கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்.. எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்” என்கிற வரிகளை ரசிகர்களுக்காக பாடினார்.

செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசையில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வரும் மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் மிரட்டலான ஸ்னீக் பீக் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: யார் வீட்ல விசேஷம்? கோலாகலமாக கொண்டாடிய  BiggBoss Housemates.. அர்ச்சனா மிஸ் பண்ணது யாரை?

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan sings Na Muthukumar lyrics heartfelt video யுவன்

People looking for online information on Na muthu kumar, Pudhupettai, Selvaraghavan, Yuvan Shankar Raja will find this news story useful.