'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாரி' பாடல் உருவான விதம் பற்றி மனம் திறந்த யுவன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படத்தின் 'நாங்க வேற மாரி' என தொடங்கும் சிங்கிள் பாடல்  02.08.2021 அன்று இரவு 10.45 மணிக்கு வெளியானது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

வெளியானது முதல்லே யூடியூப்பிலும், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சிங்கிள் பாடல்களின் முந்தைய சாதனைகளை தகர்த்தும் வருகிறது. 

தற்போது வரை 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1.1 மில்லியன் லைக்ஸ் உடன் யூடியூப் டிரெண்டிங்கில் மூன்று நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த பாடல் உருவான விதம் பற்றி யுவன் சங்கர் ராஜா பேசிய வீடியோ ஒன்றை சோனி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் யுவன் கூறியது யாதெனில், தல அஜித்திற்காக மட்டுமே பிரத்யேகமாக இந்த பாடல் உருவாக்கப்பட்டதென்றும், திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருக்க ஒரிசாவில் இருந்து டிரம்ஸ் இசைக்கலைஞர்களை வரவழைத்ததாகவும், இயக்குனர் எச். வினோத் வழிகாட்டுதல்படி இந்த பாடலை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

'வலிமை' படத்தின் 'நாங்க வேற மாரி' பாடல் உருவான விதம் பற்றி மனம் திறந்த யுவன்!! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan shankar raja about making of valimai songs

People looking for online information on Ajith Kumar, Valimai, Yuvan Shankar Raja will find this news story useful.