"போன டிசம்பர்ல தான் அப்பா கூட பேசுனேன்.. சண்டை போட்டு".. மயில்சாமி குறித்து உருகும் யுவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு தனது தந்தையுடனான உறவு குறித்து மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தலைவன் வடிவேலு சந்திரமுகியுடன் டான்ஸ் ஆடுவாரோ.. சந்திரமுகி-2 வைரல் BTS😊

நடிகர் மயில்சாமி சில நாட்களுக்கு முன்   அதிகாலை மாரடைப்பால் காலமானார். 57 வயதான நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி  உயிரிழந்தார்.  பின்னர் அஞ்சலிக்கு பிறகு நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை யுவன் அளித்துள்ளார். அந்த பேட்டியில் தந்தை மயில்சாமி குறித்தும் அவருடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்துள்ளார். "அப்பாக்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் என நினைத்து சொல்லாம விட்ட விஷயம் எதாவது இருக்கா?" என்ற கேள்விக்கு "இந்த 8 வருடத்தில் ஒவ்வொரு 2 வருடத்துக்கு ஒரு முறை சண்டை போட்டு விடுவோம். ஒரு சண்டை ஒன்றரை வருடங்கள் முதல் 2 வருடங்கள் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் அவருடன் நானும் என்னுடன் அவரும் பேசிக்கவே மாட்டோம். ஒரு வீட்டில் தான் இருப்போம். நான் வீட்டுக்கு வருவேன். அவரோடு பேசாமல் மாடிக்கு போய்டுவேன். சமீபத்தில் நாங்கள் போட்ட சண்டையால் டிசம்பர் வரை அவருடன் பேசவில்லை. சமீபத்தில் தான் அவரோடு பேசினேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும். அவர் கூட நான் பேசாமல் இருந்து இதுமாதிரி நடந்து இருந்தால் அதை என்னால் எப்படி தாங்கி இருக்க முடியும் என்று தெரியவில்லை. கடந்த டிசம்பர் மாதம் தான் பேசுனோம். ஒரு நல்ல பட வாய்ப்பு வந்தது. அடுத்த மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. அந்த படத்தை அவர் பார்த்துட்டு போயிருக்கலாம். அந்த படம் குறித்து அப்பா அடிக்கடி விசாரிப்பார். எல்லாம் இனி நல்லா நடக்கும்னு தெரிந்துள்ளது போல அவருக்கு".  என யுவன் பதில் அளித்துள்ளார்.

Also Read | "விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதலுக்கு நானும் ஒரு காரணம்".. எப்படி? மிர்ச்சி சிவா ஜாலி EXCLUSIVE!

"போன டிசம்பர்ல தான் அப்பா கூட பேசுனேன்.. சண்டை போட்டு".. மயில்சாமி குறித்து உருகும் யுவன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yuvan Mayilsamy about His relationship with father Mayilsamy

People looking for online information on Mayilsamy, Yuvan Mayilsamy will find this news story useful.