YASHIKA: “குடிச்சுட்டு கார் ஓட்டினேனா?”.. மௌனம் கலைத்த யாஷிகா.. பரபரப்பு விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஈசிஆர் கார் விபத்து சம்பவத்தை அடுத்து பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி இந்த விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் யாஷிகாவின் மீதான பலவகையான விமர்சனங்களுக்கு அவர் தற்போது சமூக வலைதளம் மூலமாக பதில் அளித்து வருகிறார்.

அதன்படி தான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக எழுகிற விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் யாஷிகா. இது தொடர்பான தமது பதிவில், “சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். நான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பலரும் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அதுபற்றிய விளக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன். போலீஸ் தரப்பிலிருந்து கூட நாங்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவர்களும் இதையேதான் தங்களுடைய அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை அவ்வாறு நான் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியிருந்தால், நான் மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன். மாறாக சிறையில் இருந்திருப்பேன். ஆனாலும் பலரும் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு கூட, நான் என் பற்றிய தவறான தகவல்களை பரப்பியதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: கொந்தளித்த Yashika.. "Delivery Boy மரணத்துக்கு நான் காரணமா?".. "ஒவ்வொரு நொடியும்".. உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Yashika opens up drunken drive accident explained

People looking for online information on Yashika Aannand, Yashikaaccident will find this news story useful.