“நமக்குள்ள சண்டையே வந்தது இல்ல”.. இறந்த தோழியின் பிறந்த நாளில் யாஷிகா உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை 01, பிப்ரவரி 2022:- பிரபல நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமானமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

Advertising
>
Advertising

யாஷிகா ஆனந்த்

இவர் முன்பாக ஈ.சி.ஆர் சாலை மார்க்கமாக நண்பர்கள் மற்றும் தோழியுடன் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தோழியை இழந்தார். தானும் பல மாதம்  மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். கால்கள் நடக்க முடியாமல் இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், அதன் பின்னர் மெல்ல தேறிவந்து இப்பொது ட்ரெண்ட் ஆன பாடல்களுக்கு நடனம் ஆடும் அளவுக்கு குணமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்..

தற்போது பிக்பாஸ் ஓடிடி  நிகழ்ச்சியில் ஒரு முக்கிய போட்டியாளராக வலம் வரும் நிரூப்பின் முன்னாள் காதலியான நடிகை யாஷிகா ஆனந்த், நிரூப் பங்கேற்றிருந்த விஜய் டிவி பிக்பாஸ் நிக்ழ்ச்சியின் 5வது சீசனிலும் ஒருநாள் திடீரென சிறப்பு விருந்தினராக வந்து, ஹவுஸ்மேட்ஸூடன் பேசிவிட்டு சென்றார். அப்போது அவர் ஹவுஸ்மேட்ஸூடன் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் நின்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தோழியின் பிறந்த நாள் நினைவலை..

இந்நிலையில் அந்த விபத்தில் தான் பறிகொடுத்த தன் தோழியின் பிறந்த நாளில் அவர் பற்றிய ஒரு நீண்ட உருக்கமான பதிவை யாஷிகா தற்போது தம் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “நீ ஒரு மனித வடிவத்தில் சூரிய ஒளியாய் இருந்திருக்கிறாய். இந்த பல ஆண்டுகளாக எப்போதும் நாம் நன்றியுடன் இருக்கிறேன். இது உன் பிறந்தநாள் .. நீ இனி இனி இல்லை என்கிற உண்மை அறியும்போது இதயம் ஜீரணிக்க மறுத்து உடைக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் உன் புன்னகையை மிஸ், இந்த நேரத்தில் மிஸ் பண்ணுகிறேன். உன் அழகான முகத்தை பார்க்க வேண்டும்.

Also Read: இப்பதானே ப்ரோமோ வந்தது?.. 2 மாசத்துக்குள்ள சீரியலை Quit பண்ணும் பிரபல ஹீரோ.. அவரே சொன்ன காரணம்! ரசிகர்கள் ஷாக்!

நீ அமெரிக்காவில் வேலை செய்யும் போது, நம் spineless உரையாடல்கள்.. அதை இப்போது மிஸ் பண்ணுகிறேன். நான் மிகவும் நம்பிய ஒருத்தி நீ. உண்மையில் என் 10-வது போர்டு எக்ஸாம் சமயத்தில், ஊக்கமின்றி இருந்த எனக்கு என் தலையில் அடித்தாற்போல் அனைத்தையும் உணரவைத்தாய் நீ. நீ என் வாழ்க்கையில் ஒரு தூணாக இருந்தாய் ... பல ஆண்டுகளாக என் உண்மையான உண்மையான பிணைப்பு நீ. நமக்கு இடையே ஒரு சண்டையும் வந்தது இல்லை. ஒரு நட்சத்திரத்தைப் போலவே இப்போது நீ வானத்தில் இருக்கிறாய்..

என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டுகிறாய். உன்னுடைய ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்ற விரும்புகிறேன். நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். நீ ஒரு 16  வருட பெண்ணாக இருந்ததில் இருந்து ஒரு வயது வந்த பெண்ணாகும் வரை பார்த்திருக்கிறேன். நான் எப்படி இருந்த சூழலிலும்கூட நீ என்னுடன் இருந்தாய் ... நான் செய்த தவறுகளை பார்த்திருக்கிறாய் .. என் வளர்ச்சியை ஒரு நபராக பார்த்திருக்கிறாய்.

நீ என்னை அறிந்திருந்தாய்.. நான் ஒரு வார்த்தையைப் பேச தொடங்கினால் நீ அதை முடிப்பாய். உன் போன்ற தூய்மையான அன்பை மீண்டும் எப்போது கண்டுபிடிப்பேன். என் ஸ்கூபி டூபி பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  என் அதிர்ஷ்ட அழகி. RIPmissyou!! எப்போதும் என் பிரார்த்தனையிலும் இதயத்திலும். மிஸ் யூ ஏஞ்சல்” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: 'இளவரசே.. நா விரல்..'.. தாலி கட்ட சொல்லிக் கொடுத்த மணப்பெண்.. கப்புனு புடிச்சுட்டாரே மாப்ள!

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aannand emotional friend Birthday who dead in accident

People looking for online information on Yashika Aannand, Yashika anand, Yashika enters biggbosstamil5 will find this news story useful.