YASHIKA AANNAND-ன் CAR விபத்தில் நடந்தது என்ன? பலி ஆன தோழி யார்? வெளியான பரபரப்பு VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை யாஷிகா ஆனந்த், நண்பர்களுடன் நள்ளிரவில் செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்து சம்பவத்தின்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து அங்கு அருகில் இருந்த பொதுமக்கள் சிலர், விபத்துக்குள்ளானவர்களை மீட்டனர். 

பின்னர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனைவரும் சேர்க்கப்பட்டதுடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, யாஷிகாவுடன் காரில் பயணித்த, அவரது தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி ஆனார்.

உயிரிழந்த பவானியின் பிரேதம் மாமல்லபுரம் போலீஸாரால், கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. வள்ளிச்செட்டி பவானி அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறையில் இருந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் பரவி வருகின்றன.

YASHIKA AANNAND-ன் CAR விபத்தில் நடந்தது என்ன? பலி ஆன தோழி யார்? வெளியான பரபரப்பு VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aannand accident how it happened exclusive video

People looking for online information on Car accident, Yashika Aannand will find this news story useful.