YASHIKA AANNAND : கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்த் மீது பிடி வாரன்ட்..? - பரபரப்பு பின்னணி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். முன்னதாக சில திரைப்படங்களிலும் நடித்து இருந்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேவந்த பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் டிவி தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு.. “தமிழின்றி நாம் இல்லை..” - வாழ்த்திய தமிழக முதல்வர்.!

இதனை தொடர்ந்து தன்னுடைய நண்பர்கள் மற்றும் தோழியுடன் பாண்டிச்சேரி செல்லும் வழியில் மாமல்லபுரம் ஈசிஆர் ரோட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் கார் விபத்துக்கு யாஷிகா ஆனந்த் ஆளானார். அந்த சம்பவத்தில் அவருடைய தோழி வள்ளிச்செட்டி பவானியையும் பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் முதுகெலும்பு மற்றும் கால் எலும்பு ஆகியவற்றில் பிரச்சினை இருந்ததால் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நலமுடன் தேறிவந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 21-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை என்பதால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனால் ஏப்ரல் 25-ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Also Read | Ponniyin Selvan : "வைரமுத்துவுக்கு மாற்றா?" - ‘பொன்னியின்செல்வன்’ பாடலாசிரியர் பரபரப்பு விளக்கம்.

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aannand Accident case court new order யாஷிகா ஆனந்த்

People looking for online information on Yashika Aannand, Yashika Aannand accident will find this news story useful.