YASHIKA கண்முழிச்சதும் கேட்ட முதல் கேள்வி!.. "BHAVANI இறந்ததை சொல்லல!"... அவரது அம்மா உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை யாஷிகாவுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஈசிஆர் சாலையில் நடந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி உயிரிழந்தார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த் கண்விழித்ததும் பவானி பற்றி கேட்டதாகவும், ஆனால் பவானி இறந்து போன விஷயத்தை இன்னும் அவரிடம் சொல்லவில்லை என்றும் யாஷிகாவின் தயார் கூறியுள்ளதாக தெரிகிறது.

சிகிச்சையில் இருக்கும், யாஷிகா ஆனந்த் எழுந்து நடக்கவே 3 மாதம் ஆகும் என்றும் தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என்றும் யாஷிகா ஆனந்தின் தாயார் கண்ணீருடன் கூறியதாக கூறப்படுகிறது. விபத்தில் அடிபட்ட யாஷிகாவுக்கு வலது கால் மற்றும் இடுப்பு எலும்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களில் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய யாஷிகா ஆனந்தின் தாயார், விபத்துக்கு பிறகு யாஷிகாவிடம் பேசியிருக்கிறார். அப்போது யாஷிகா, தன் தாயாரிடம் தான்தான் கார் ஓட்டியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே யாஷிகாவுக்கு ஒரு சர்ஜரி நடந்தபோது அதிக பிபி ஏற்பட்டதாம். பிபி அதிகமாக சென்றதால், அவரிடம் எந்த அதிர்ச்சியான செய்தியும் சொல்ல கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

எனவே பவானி இறந்ததை யாஷிகாவிடம் இன்னும் கூறவில்லை என்று யாஷிகாவின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஆனால் யாஷிகா எழுந்ததும் பவானி பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறாராம். அதற்கு பவானி ரொம்ப மிகவும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார் என்றும், பவானியின் பெற்றோர் வந்துவிட்டதாகவும் யாஷிகாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாஷிகாவின் அம்மா பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

பவானி தங்களது வீட்டில்தான் தங்கி இருந்ததாகவும், பவானியின் செல்போன் பிரச்சினையாக இருந்ததால் தன் செல்போனை வாங்கிதான் பவானி யாஷிகாவுடன் செல்பி எடுத்ததாகவும் யாஷிகாவின் தாயார் குறிப்பிட்டிருக்கிறார்.

கொஞ்சம் அடிபட்டிருக்கும்போதே, சரியான நேரத்தில் பவானியையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து இருந்தால், அவரும் பிழைத்திருப்பாரோ என்னவோ என்று யாஷிகா அம்மா வருத்தத்துடன் கூறியதாக தெரிகிறது.

ALSO READ: "அந்த பொண்ணு Top-ல எகிறி போயி!" .. யாஷிகா Car விபத்தின் திக்திக் நொடிகளை நேரில் பார்த்தவர்களின் உறையவைக்கும் பேட்டி! Exclusive

YASHIKA கண்முழிச்சதும் கேட்ட முதல் கேள்வி!.. "BHAVANI இறந்ததை சொல்லல!"... அவரது அம்மா உருக்கம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aanand asking about bhavani her mother emotional

People looking for online information on Yashika Aannand will find this news story useful.