VIDEO:"கூட்டத்தில் சிக்கிய தீபிகாவுக்கு நடந்தது என்ன?".. பெண் செய்த காரியம்.. தீயாய் பரவும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை தீபிகா படுகோனே ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்ட போது அவருடைய ஹேண்ட்பேகை ஒரு பெண் முழுமையாக உருவிய நிகழ்வு, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மும்பை புறநகர்ப் பகுதியொன்றில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று இரவு டின்னர் சாப்பிடுவதற்காக, சென்று வெளியே வந்த  தீபிகாவை பெண்கள் கூட்டமொன்று சூழ்ந்துகொண்டது. அத்தனை நெரிசலிலும் நெருக்கடியிலும் சிரித்த முகத்துடன் அந்த கும்பலை சமாளித்து காரில் ஏற முயற்சிக்கிறார் தீபிகா.

ஆனால், அவரை சூழ்ந்த பெண்கள், டிஷ்யூ நாப்கின்களை தீபிகாவிடம் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். அதில் ஒரு பெண், தீபிகாவின் கவனத்தை ஈர்க்க, தீபிகாவின் கையில் மாட்டியிருந்த அவரது சிவப்பு நிற ஹேண்ட் பேகை பிடித்து உருவி இழுத்தேவிட்டார்.

எனினும் தீபிகாவின் மெய்க்காப்பாளர்கள், சுதாரித்து, ஹேண்ட் பேகை மீட்டு, தீபிகாவை வேகமாக காருக்குள் உட்கார வைத்து அனுப்பினர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ALSO READ: இயக்குநரின் மனைவியுடன் 'வாத்தி கம்மிங்' பாட்டுக்கு குத்தாட்டம்! அட்லீ பட நாயகியின் ViralVideo!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Woman pulls purse Deepika Padukone Mumbai video தீபிகா படுகோனே

People looking for online information on Mumbai, Trending, Viral will find this news story useful.