BIGG BOSS வீட்ல.. ராஜூ ஏன் கோவப்படல.. அவர் டீலிங் வித்தியாசமானது.. நிரூப் சொல்லும் காரணம் .. EXCLUSIVE INTERVIEW!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Tamil5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக விளங்கியவர் நிரூப்.

Advertising
>
Advertising

BiggBoss5: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் சக போட்டியாளர்களால் வலிமை மிக்க போட்டியாளர் என அதிகமுறை குறிப்பிடப்பட்டு, உடல் அளவில் வலிமையான போட்டியாளர் என்பதற்காகவே பலமுறை பலராலும் நாமினேட் செய்யப்பட்டவர் நிரூப் நந்தகுமார்.

நிரூப் பேட்டி

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே வரை பிக்பாஸ் வீட்டுக்குள் தம்முடைய இருப்பை தக்கவைத்தார். இந்நிலையில் நிரூப் நந்தகுமார் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த பின்னர், நிரூப் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டியில் நிரூப் நந்தகுமார் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Also Read: வெடிய போடுங்க ஜி! பாட்டு, படம், டான்ஸூ, காமெடி, சீரியலை அடுத்து..  இப்ப விஜய் டிவில இதுவும் வருது!

ஃபினாலே வரை நிரூப்

இந்த பிக்பாஸ் போட்டியில் கடைசியாக 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் எஞ்சியிருந்தனர். அவர்கள் ராஜூ, பிரியங்கா நிரூப் மற்றும் அமீர். இதில் அமீர் ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றிபெற்று ஃபினாலேவுக்கு போவதற்கான நேரடியாக வாய்ப்பைப் பெற்றிருந்தார். பின்னர் ஃபினாலேவில் அமீர், பாவனி, நிரூப் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

ராஜூ வெற்றி

அதன் பின்னர் ராஜூ மற்றும் பிரியங்கா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன், இருவரையும் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், அதன் பின்னர் பிரியங்கா மற்றும் ராஜூ இருவரையும் பிக்பாஸ் அரங்கத்துக்கு அழைத்து வந்த கமல்ஹாசன், ராஜூ வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

இந்த பிக்பாஸ் வீட்டில், ஏகோபித்த ரசிகர்களின் இதயம் வென்ற நிரூப்  மக்களின் பெரும் ஆதரவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் இறுதிவரை நின்று ஆடினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நிரூப் நந்தகுமார், பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.

Also Read: BiggBoss-ல கடைசி வரைக்குமே இது எனக்கு நடக்காம போச்சு... நிரூப் ஆதங்கம்!

Bigg Boss வீட்ல.. ராஜூ ஏன் கோவப்படல

இந்த பேட்டியில், “இந்த இடத்துல ராஜூ கோவப்பட்டிருக்க வேண்டும், ஆபால் கோவப்படல என தோன்றுகிறதா? உங்களுக்கு.?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் நிரூப் பதில் அளித்திருந்தார். அந்த பதிலில், “ராஜூ அதிக இடத்துல கோவப்படல என்று சொன்னாலும் கூட, ராஜூ டீல் பண்ணும் விதம் வித்தியாசமானது. அதை தான் அவரும் சொல்கிறார். அவர் வாதத்துக்குள் போக விரும்பாதவராக இருக்கலாம்.

அவர் கோவப்பட்டிருக்கலாம் என்றாலும் எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவேளை நாம பேசுனா வெளில தப்பா எடுத்துப்பாங்களோனு அவர் நினைத்திருக்கலாம். எனினும் இதுவும் உண்மையா? பொய்யா? என எனக்கு தெரியாது. நான் இனி தான் அவருடன் பழக போகிறேன்!” என நிரூப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முழு பேட்டியிலும்  நிரூப் பேசிய பல்வேறு விஷயங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.

BIGG BOSS வீட்ல.. ராஜூ ஏன் கோவப்படல.. அவர் டீலிங் வித்தியாசமானது.. நிரூப் சொல்லும் காரணம் .. EXCLUSIVE INTERVIEW! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Why raju didnt get angry bigg boss 5 Niroop exclusive interview

People looking for online information on Bigg Boss 5 Niroop, Bigg boss title winner raju, Niroop Nandakumar, Raju bigg boss title winner will find this news story useful.