“நாக்கை துருத்தி.. சூலாயுத கடவுளாகவும் வேற ஒரு நமீதாவை பாத்துருக்கேன்..!”.. உடைக்கும் அபிஷேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிஷேக் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்திருக்கிறார். இதில் அவரை பல்வேறு கேள்விகள் 'Fatman' ரவீந்தர் கேட்டார்.

Advertising
>
Advertising

இதற்கு பதிலளித்த அபிஷேக், பிக்பாஸ் வீட்டுக்குள் அனைத்து போட்டியாளர்களுடனும், தான் மிகவும் நெருங்கிப் பழகி, அதிக நேரம் செலவிட்டதாகவும், அதேசமயம், வருண், சிபி மற்றும் ராஜூ உள்ளிட்ட சிலரிடம் சினிமா குறித்து மிகவும் அதிகமாகவும் ஆழமாகவும் பேசியதாகவும் குறிப்பிட்ட அபிஷேக், ஆனால் அவை குறித்த விஷயங்கள் சரியாக ஷோவில் வெளிவரவில்லை என்றும், மாறாக டாஸ்கின் போது, தான் நடந்து கொண்டது தான் ப்ரோமோவிலும் ஷோவிலும் அதிகமாக வந்ததை நண்பர்கள் கூறி இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய ஓவர் கான்ஃபிடண்ட் பற்றி வெளியில் இருந்து வரும் பார்வைக்கு பதிலளித்த அபிஷேக், தன்னுடைய இயல்பு அதுதான் என்றும், அது திமிரு அல்ல யோக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நமீதா ஏன் வெளியே சென்றார் என்கிற கேள்வியை 'Fatman' ரவீந்தர் முன்வைத்தார். இதே கேள்வியை இதற்கு முன்பாக நாடியா வெளியேறிய பின்னர் பிஹைண்ட்வுட்ஸ்கு அவர் பேட்டி அளிக்கும் போது அவரிடமும் ரவீந்தர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த நாடியா நமீதா மீது மிகவும் மரியாதை இருப்பதாகவும், இன்ஸ்பிரேஷனாக அவர் இருப்பதாகவும் குறிப்பிட்டதுடன், அது குறித்த காரணத்தை வெளியே சொல்ல முடியாத சூழலில், தான் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது, நமீதா ஏன் வெளியே சென்றார் என்கிற கேள்வியை ரவீந்தர் கேட்டபோது பதிலளித்த அபிஷேக், “நமிதாவின் கதையைக் கேட்டு வீட்டுக்குள் இருக்கும் அனைவருமே உருகாமல் இல்லை. ஒரு தெய்வ கடாட்சம் பொருந்திய கடவுளாகவே பார்க்க வைத்துவிட்டார். நாக்கை மடித்து வைத்துக் கொண்ட ஒரு கடவுளாகவும் அவரைப் பார்த்திருக்கிறேன்.

நாக்கை துருத்திக் கொண்டு சூலாயுதத்தை ஏந்திய ஒரு கடவுளாக அவரின் இன்னொரு முகத்தையும் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருந்து வெளிவந்த அந்த பிஹேவியருக்கு அவர் ஒருநாள் எங்களையெல்லாம் அமரவைத்து விளக்குவார் என்றிருக்கிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

இதிலிருந்து குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமை என்ன சம்பவம் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக பேசிவருகின்றனர். அபிஷேக் பேசும் பேட்டியின் முழு வீடியோ இணைப்பில் இருக்கிறது.

“நாக்கை துருத்தி.. சூலாயுத கடவுளாகவும் வேற ஒரு நமீதாவை பாத்துருக்கேன்..!”.. உடைக்கும் அபிஷேக்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Why Namitha went out seen her another face biggboss abishek video

People looking for online information on Abishek, AbishekRaaja, Namitha, Namitha Marimuthu will find this news story useful.