அன்பு டீம் 2: சுரேஷ் சக்கரவர்த்தி யாரை 'கலாய்ச்சு' இருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாலாஜி, நிஷா, ரம்யா ஆகியோர் போட்டியிட்டனர். கொடுத்த நேரத்துக்குள் முடித்ததால் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தான் சரியாக அடுக்கவில்லை என்றும் ரம்யா தான் இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்ததாகவும் பாலாஜி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் பிக்பாஸ் அறிவுரையின் பேரில் அனிதா சென்று மேற்பார்வையிட்டு பாலாஜி தவறு செய்ததாக சொன்னார். இதையடுத்து ரம்யா பாண்டியன் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் பாலாஜி சரியாக அடுக்கவில்லை என்பது அனிதாவுக்கு முன்னரே தெரியும் ஆனால், அவர் ஏன் அதை பாலாஜி ஒப்புக்கொள்ளும் வரை சொல்லவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர் ஒருவர் இதுகுறித்து சுரேஷ் சக்கரவர்த்தியிடம், '' அனிதா உண்மையை மறைத்தது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் தாத்தா?,'' என கேட்டிருந்தார். பதிலுக்கு சுரேஷ்,'' அன்பு டீம் 2'' என பதிலளித்து உள்ளார். சனம் வெளியேற்றத்தை அடுத்து ஆரி, அனிதா, பாலாஜி மூவரும் ஒரு குரூப்பாக அடிக்கடி அமர்ந்து பிரச்சினைகள் குறித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Why Anitha Sampath hided the truth in Captain Task?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.