"ஜோதிகா-வோட எப்ப படம் பண்ண போறீங்க..".. சூர்யாவின் வைரல் பதில்.. EXCLUSIVE பேட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா, ரெஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெய் பீம் திரைப்படம். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தினை ஜோதிகா & சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 

Advertising
>
Advertising

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, இப்படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.  'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்த்தில் பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கும் நடிகர் சூர்யாவிடம், “ஜோதிகாவுடன் எப்போது இணைந்து நடிக்கப் போகிறீர்கள்?” என்கிற கேள்வியை ரசிகர்களின் சார்பாக கிகி முன்வைத்தார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் திருமணமாகி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பிலான திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒரு படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கியிருந்தார். இப்படத்துக்கு இமான் இசையமைத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என்கிற கேள்வியை சூர்யாவிடம் கேட்டபோது, ஒரு வார்த்தையில் பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட் .. ஸ்கிரிப்ட் வரவேண்டும்” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மேலும் பேசியவர், “கணவன் மனைவியாகவும் (சில்லுனு ஒரு காதல்), பேரழகன் படத்திலும், போலீஸ் கதையிலும் (காக்க காக்க) நடித்துள்ளந்து என எல்லாவிதமான கதைகளும் பண்ணிவிட்டோம்.

அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இப்போ இருக்கிற லுக் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

"ஜோதிகா-வோட எப்ப படம் பண்ண போறீங்க..".. சூர்யாவின் வைரல் பதில்.. EXCLUSIVE பேட்டி..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

When the next film with Jyothika Suriya exclusive answer

People looking for online information on 2D Entertainment, JaiBhim JaiBhimOnPrime JaiBhimTrailer, Jyothika, Rajisha Vijayan, Suriya will find this news story useful.