மூளை பக்கவாத நோயா.? - தீவிர சிகிச்சையில் பிரபல மேற்கு வங்க இளம் நடிகை..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஒருவரது உடல்நிலை குறித்து தற்போது வெளி வந்துள்ள தகவல், ரசிகர்கள் பலரையும் உச்சகட்ட வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரிலா சர்மா. இவர் வங்காள மொழியில் பிரபல நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார். மேலும், ஆண்ட்ரிலாவுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஆண்ட்ரிலா உடல்நிலை குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவல், வங்காள திரை உலகினர் மற்றும் ரசிகர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆண்ட்ரிலாவுக்கு ஏற்கனவே புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு முறை சிகிச்சை பெற்று குணம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில் தற்போது மீண்டும் ஆண்ட்ரிலாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ரிலாவுக்கு கடந்த சில தினங்கள் முன்பாக மூளை பக்கவாத நோய் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து, ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே ஆண்ட்ரிலாவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே வேளையில், ஆண்ட்ரிலாவின் தற்போதைய நிலை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றும் தெரிகிறது. ஆண்ட்ரிலாவின் உடல்நிலை குறித்து தகவலறிந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

West Bengal actress aindrila sharma in hospital reportedly

People looking for online information on Aindrila Sharma, Bengal Actress will find this news story useful.