'அந்த' வார்த்தையை எல்லாம் ஏன் சொல்றீங்க?... கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் அரக்கர்களுக்கும், மன்னர் குடும்பத்தினருக்கும் இடையே டாஸ்க் நடந்தது. இதில் ராஜ குடும்பத்தை காக்க அரக்கர்கள் முன்னிலையில் ஒருவர் சிலையாக இருக்க வேண்டும். தோற்று விட்டால் அவர்கள் அரக்கர்கள் குடும்பத்தினருக்கு அடிமையாக வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தன.
இதையடுத்து அரச குடும்பத்தில் இருந்து முதல் ஆளாக சனம் ஷெட்டி சிலையாக நடிக்க சென்றார்.

இறுதியாக இதில் பங்குபெற சம்யுக்தா சென்றார். அவரை வெறுப்பேற்ற சுரேஷ் பல்வேறு உத்திகளை கையாண்டார். அதில் பாம்பு கூட எல்லாம் ஏன் படுத்து தூங்கற? என சனமை மறைமுகமாக தாக்கினார். இந்த டாஸ்க்கில் சம்யுக்தா வென்றார். எனினும் அரக்கர்கள் டீம் பயன்படுத்திய பாம்பு உள்ளிட்ட வார்த்தைகள், (குறிப்பாக சுரேஷின் வார்த்தைகள்) தங்களுக்கு பிடிக்கவில்லை என ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

'Well Done' fans praised Sanam Shetty's Game Spirit

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.