VIDEO: மாத்தி, மாத்தி பேசுறாங்க... 'அவங்களுக்கு' குறும்படம் போடுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோழி-நரி டாஸ்க் இரண்டாவது நாளாக நேற்றும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்தது. இதில் யார் முதலில் சென்று முட்டையை அட்டாக் செய்வது என நரிகள் கலந்து ஆலோசித்தன. அப்போது ஆரி, சோம் ஆகியோரும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். யாரிடம் பணம் குறைவாக இருக்கிறதோ அவர்கள் செல்லலாம் என்பது போல இந்த உரையாடல் முடிந்தது.

அப்போது இரண்டாவது முறையாக நான் செல்கிறேன் என ஆரி கூறினார். இதற்கு அர்ச்சனா, ரம்யா, அனிதா உள்ளிட்டோரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் விளையாட்டின்போது இதை அவர்கள் கடைபிடிக்கவில்லை. குறிப்பாக அனிதா ஆரிக்கு பதிலாக தானே இரண்டாவது முறை சென்று முட்டையை தொட்டார். இதைப்பார்த்த ஆரி ஏன் இப்படி பண்ணீங்க? என கேட்டார்.

ஆனால் அர்ச்சனா, அனிதா, ரம்யா உள்ளிட்டோர் ஆரியின் வாதத்தை ஏற்கவில்லை. இதனால் இது சண்டையாக வெடித்தது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் முன்பு அனிதா உள்ளிட்டோர் பேசியதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவங்களுக்கு ஒரு குறும்படம் போடுங்க பாஸ் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

'We Want Kurumpadam' Netizens requested to Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.