நாங்க ரெண்டு பேரும் 'நல்லா' விளையாடுனதுனால ... ஓபனாக பேசிய பாலா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ஆரி, பாலா இருவருக்கும் அதிகமான ரெட் கார்டுகள் கிடைத்தன. இதுகுறித்து பாலா, ''இந்த கேம் எப்படி போய்ட்டு இருக்குன்னா? எனக்கும் ஆரி பிரதர்க்கும் பிரச்சினை. அதனால எங்க ரெண்டு பேர்கூட எல்லாருக்கும் பிரச்சினை. அப்படிங்கிற மாதிரி தான் இந்த கேம் போய்ட்டு இருக்கு. ரெட் எல்லாம் முடிஞ்சிருச்சு. வழக்கம்போல நானும், அவரும் தான் இந்த வீட்ல கெட்டவரா இருக்கோம். நான் ஒத்துக்கிறேன்.

அவரு விளையாடின கேம் எனக்கு புடிக்கல. நான் விளையாடின கேம் அவருக்கு பிடிக்காம இருக்கலாம். நாங்க ரெண்டு பேரு விளையாடின கேம் யாருக்கும் புடிக்காம இருந்து இருக்கலாம். 90% Effort போட்டு விளையாடுனதுனால தான் நாங்க ரெண்டு பேரும் இந்த சிச்சுவேஷன்ல இருக்கோம். இதை நான் சொல்லும் போது நிறைய பேருக்கு தப்பா படலாம். அப்போ நாங்க சரியா விளையாடலையான்னு? அப்படி இல்லை. நாங்க ரொம்ப சரியா விளையாடி இருக்கோம்னு நினைக்குறேன்.

ஏன்னா நான் உள்ள வரும்போதே இங்க சேப் கேம் விளையாடக்கூடாதுன்னு தான் வந்தேன். சேப் கேம் நானும் விளையாடல, அவரும் விளையாடல. விளையாண்ட முறைகள் வேற மாதிரி தப்பா இருந்து இருக்கலாம். இங்க சேப் கேம் விளையாடாதது இந்த இடத்துல நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்படுத்துச்சு. தீங்கு ஏற்படுத்துச்சு. அதுல நானும் ஒருத்தன். அதனால இதை உங்களுக்கு குடுக்குறேன், என தெரிவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி பேசுனது எல்லாமே அக்மார்க் உண்மை பாஸ் என கருத்து தெரிவித்து, அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

We are not playing Safe Game in Bigg Boss House: Balaji

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.