“என்னயா நியாயம் இது?.. நான் போறேன்!”.. கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர் விட்டு அழுத அக்‌ஷரா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் தற்போது நடந்துகொண்டிருக்கும் காயின் டாஸ்கில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் மூவரும் அக்‌ஷராவிடம் காயின் இருப்பது பற்றி பேசினர். அதைத் தேடினர். இதேபோல் ராஜூ அக்‌ஷராவுக்கு உதவுவதாக எண்ணி அவரை கேட்டனர்.

பாவனியோ, அக்‌ஷராவிடம், “என்னிடம் ஏதாவது பிரச்சனை என்றால் நேரடியாக சொல்லுங்கள்.. பின்னாடி பேசுங்க” என கூறியிருந்தார். ஆனால, தான் பாவனி பற்றி பேசவில்லை என்றும் பாவனி தவறாக புரிந்துகொண்டதாகவும் அக்‌ஷரா நண்பர்களிடம் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், அக்‌ஷராவை பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைக்க, அங்கு என்று விம்மி அழத் தொடங்கிய அக்‌ஷரா, “எனக்கு கத்தி பேசுனா புடிக்காது. பயம் வரும் சின்ன வயசுல இருந்து. என்னயே மாத்திடுவாங்க போல. பிரியங்கா, அபிஷேக் மாதிரி எனக்கு மூளைச்சலவை செய்து அவங்களுக்கு சரிசமமா பேச வராது. மதுவுக்கு உதவி பண்லாம்னு நெனைச்சுதுதான் தப்பு. சுயநலமா இருந்திருக்கணும். நல்லவிதமாவும், தன்மையாகவும் இருக்குறது பிரச்சனையா இருக்கு.

என்னால் என்ன மாதிரி இருக்க முடியல. சின்ன சின்ன விஷயத்துக்கும் சண்டை போடுறதும், தட்டிக் கேக்குறதும்.. என்னயா நியாயம் இதெல்லாம்? புரியல. அப்படி அப்டியே வாழ்ந்துட்டு போயிறணும். பிரியங்கா, நிரூப் எல்லாரும் குரூப் குரூப்பா இருக்காங்க. அந்த குரூப்ல இருந்து அவங்களுக்குள்ளயே சப்போர்ட் பண்றாங்க. ஆனா ஒரே ஒருத்தர் கூட எனக்கு சப்போர்ட் பண்ண மாட்றாங்க. அவங்களோட இருக்கணுமா? தனியா இருக்கணுமானு தெரில. இப்படி உக்காந்து அழுதுட்டு இருக்கணுமானு தெரில.

இப்ப கூட காயின் அக்‌ஷரா கிட்ட மட்டும் இருக்கக் கூடாது. ஏன் எங்கிட்ட மட்டும் இருக்க கூடாது?  வெளில சொல்லக் கூடாதுனு விளையாண்டோம். காயினும் எங்கிட்ட இல்ல. என்னால இருக்க முடியல. நான் போக விரும்புறேன். யாருக்கும் என்னை பிடிக்கல. இவங்கள மாதிரி எனக்கு கஷ்டமான வாழ்க்கை கதை இல்லை. என்னால என் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டாதான் எல்லாருக்கும் புடிக்குமா? எனக்கு தெரியல.” என்று கண்ணை கசக்கிக் கொண்டு அழுதார்.

அக்‌ஷராவுக்கு பதில் அளித்த பிக்பாஸ், “நீங்க யாரு மாதிரியும் இருக்க வேணாம். நீங்க நீங்களா இருங்க அக்‌ஷரா. 2 நாள் நேரம் எடுத்துக்கங்க. யோசிங்க. வழி கிடைக்கும்.” என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

முன்னதாக அக்‌ஷரா பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும்போது, அவரது கதையில் அக்‌ஷரா என்ன செய்தார் என்பதற்கான முகாந்திரம் இல்லை என்று சொல்லி பிரியங்கா டிஸ்லைக் செய்தார். லைக் போட்ட ராஜூவும், “உன் மனசு கஷ்டப்பட கூடாதுனு தான் லைக் போட்டேன்!” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போதே அக்‌ஷரா தனியே சென்று நின்று அழத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

Wants to go out akshara cries confession room biggbosstamil5

People looking for online information on Akshara, Akshara Cries, Akshara Emotional, Akshara Reddy, AksharaReddy, Biggboss akshara, Biggbosstamil akshara, Biggbosstamil5 akshara will find this news story useful.