“கல்யாணத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு வாங்குனது..”… அச்சோ என்ன ஆச்சு? - CWC மணிமேகலை பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களைக் கொண்டிருக்கும் ஒரு நபராக இருந்துவருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | “எனக்குள்ள இருக்குற குழந்த ஆட்டம் போடுது”…. fangirl ஆன ’நானே வருவேன்’ நடிகை – viral pic

CWC மணிமேகலை….

தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக  பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார்.  நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக எண்டர்டெயின் செய்து வந்தார். அவரின் குறும்புகளும், நிகழ்ச்சியின் போது அவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த சீசனின் ஸ்டார் போட்டியாளர்களில் ஒருவரானார் மணிமேகலை.

பைக் திருட்டு…

இந்நிலையில் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் தன்னுடைய கணவரின் விலையுயர்ந்த கே டி எம் பைக் காணாமல் போயுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் “அசோக் நகர் அருகே உள்ள எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் இன்று அதிகாலை திருடப்பட்டது. கல்யாணத்துக்குப் பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆசையா வாங்குனா ஃபர்ஸ்ட் பைக். மனசுக்கு கஷ்டமா இருக்கு. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ !” என சோகத்தோடு கூறியுள்ளார்.
மேலும் வண்டியைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ள அவர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாமே நல்லபடியாக முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

அடுத்தடுத்து நடந்த விபத்துகள்…

சமீபத்தில் சில மாதங்களுக்கு  மணிமேகலை ஒரு கார்விபத்தில் சிக்கினார்.  அது சம்மந்தமாக அவர் “ஒரு விபத்தில் ஜஸ்ட் மிஸ்-ல உயிர் பிழைத்து நான் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம், வெளியே சென்று கொஞ்சமாவது என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்து வெளியே சென்றால், நீ என்ன ரிலாக்ஸ் பண்றது என்பது போல் ஒரு சம்பவம் நடக்கும்ல? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்தது. ஆம், நான் பாட்டுக்கு மெதுவாகதான் காரில் சென்று கொண்டிருந்தேன். பார்த்தால் ஒரு லாரி, டோல் பூத் அருகே, லைட்டாக வந்து கார் மீது விட்டுவிட்டார்கள். காரின் முன்பக்கம் கொஞ்சம் காலிதான். ஆனால் ஷோரூமில் சென்று, காரை விட்டால் பர்ஸ் முழுவதையும் காலி செய்து விடுவார்கள். அந்த அளவுக்கான சேதாரம்தான் அது’ என்று கூறியிருந்தார்.

அதுபோலவே அடுத்ததாக காலில் சுடுதண்ணீர் பட்டு சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதுபோல அடுத்தடுத்து சம்பவங்கள் நடப்பதைக் குறிப்பிட்டு மணிமேகலை வருத்தத்தோடு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Also Read | பிரபுதேவாவுடன் மீண்டும் Sing in the rain…தெறிக்க விட்ட வடிவேலுவின் பாட்டு… வைரல் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vj manimegalai viral status on theft of her bike

People looking for online information on Bike, CWC Manimegalai, VJ Manimegalai will find this news story useful.