மழையை யார் உணர்வார்கள்? விஜே அஞ்சனாவின் ரசனையான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாவைப் பற்றியே எல்லா செய்திகளும் இருக்க, கோடையை தணிக்க பொழிந்த மழையைப் போல அவ்வப்போது திரைப் பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சின்னத்திரை, சினிமா, கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லாரும் ஒரே குடைக்குக் கீழ் இந்த இக்கட்டான சமயத்தில் வலை வழியே ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையிலிருந்து மேக மூட்டமாக இருக்க, சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பிரபல விஜே அஞ்சனா இந்த மழையைக் கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது, ‘ஒஹோ மேகம் வந்ததோ! யார் சொன்னது க்ரே கலர் இருண்மையானது என்று? இதோ கருமையான இந்த மேகங்கள் சந்தோஷத்தின் அடையாளமாக வந்துள்ளது....சிலர் மழையில் சும்மா நனைவார்கள்...ஆனால் சிலர்தான் மழையை உணர்வார்கள்’ என ரசனையான கேப்ஷனுடன் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

VJ Anjana Insta Post and Pic about Rain and corona

People looking for online information on Anjana, Corona, Covid-19 will find this news story useful.