VIDEO: “இத பாக்கும் போதெல்லாம் அழுகை வருது!”... பிரபல காமெடி நடிகர் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மறைவு தமிழ்த் திரை உலகை மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்த் திரைத் துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிய இழப்பாக விவேக் அவர்களின் மறைவு கருதப்படுகிறது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் விளங்கிய விவேக் தம்முடைய நகைச்சுவை காட்சிகளில் கூட சமூக நல கருத்துக்களை முன்வைத்து பேசியவர். அத்துடன் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவைக் காட்சிகளில் விவேக் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகர் விவேக், மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்டோர் பங்குபெறும் ஒரு படப்பிடிப்பு காட்சியை வீடியோ எடுத்து தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் நடிகர் மயில்சாமி இன்ஸ்பெக்சன் என்கிற வசனத்தை சொல்வதற்கு சிரமப்பட, விவேக் அதற்கு உதவி செய்கிறார்.

எனினும் இறுதியில் அந்த வசனத்தை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்த வீடியோவை எடுப்பதை பார்த்து வீடியோ எடுக்கிறீர்களா? என்று விவேக் எதார்த்தமாக கேட்கிறார். இந்த கலகலப்பான வீடியோவை, விவேக்கை பார்க்கும் போதெல்லாம் இதைச் சொல்லி சிரித்ததாகவும் இந்த முறை இந்த வீடியோவை பார்க்கும் போது அழுகை வருவதாகவும் நடிகர் சதீஷ் தமது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vivekh mayilsamy shoot sathish emotional share post

People looking for online information on Mayilsami, Sathish, Vivekh will find this news story useful.