'அயோக்யா'வுக்கு பிறகு பிரபல இயக்குநருடன் விஷால் இணையும் படத்தின் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வந்தா ராஜவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு சுந்தர்.சி, விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

'ஆம்பள' படத்துக்கு பிறகு விஷால்- சுந்தர்.சி இணையும் இந்த படத்தில் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  வெளியாகியுள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு பின்னி மில்லில் இன்று முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தற்போது விஷால் நடிப்பில் அயோக்யா கடந்த மே 11 ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Vishal and SundarC's next film starts from today

People looking for online information on Sundar C, Tamannaah Bhatia, Vishal will find this news story useful.