அடக்கடவுளே!! சூரி விவகாரம் போலவே.. திருமணத்துக்கு சென்ற விமலுக்கு நடந்த பரபரப்பு சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் எதார்த்த நாயகனாக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் விமல்.

நடிகர் விமல் நடித்த ‘களவாணி’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விமல், முன்னதாக ‘பசங்க’ உள்ளிட்ட திரைப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் ‘வாகை சூட வா’ எனும் திரைப்படத்தில், விமல் தனது வித்தியாசமான நடிப்பாலும், அந்த படத்தின் வித்தியாசமான கதைக்களத்தாலும் நிறைய வெகுமதிகளை பெற்றார்.

இந்த நிலையில்தான் நடிகர் விமல் ஒரு திருமணத்துக்கு சென்றிருக்கிறார். அந்த திருமணத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும்போது, அவருடைய செல்போன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆம், நடிகர் விமல் ஒரு திருமண விசேஷத்திற்கு சென்றபோது அங்கு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் அவரிடம் வந்து, “அண்ணே ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” என்று கேட்கவும், தன்னுடைய செல்போனை நாற்காலியில் வைத்து விட்டு எழுந்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுப்பதற்கு ஒத்துழைத்ததாக தெரிகிறது. செல்ஃபி எடுத்து முடித்த பின்பு மீண்டும் நாற்காலியை பார்த்தபோது நாற்காலியில் இருந்த செல்போன் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருக்கிறது.

விமலின், விலை உயர்ந்த செல்போன் காணாமல் போன இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் விமல் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதேபோல் அண்மையில் நடிகர் சூரி வீட்டு விசேஷத்தின் போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூரி தன்னுடைய சகோதரரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட போது அங்கு மணமகள் அறைக்குள் புகுந்துள்ளார் மர்ம நபர் ஒருவர். ஆம், விஐபி போல் திருமணத்துக்கு வந்த அந்த நபர், அனைவரிடமும் சிரித்துப் பேசி கைகுலுக்கி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சூரியிடம் கூட, “அண்ணே .. நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டிருக்கிறார்.

அதன் பின்னர் மணமகள் அறைக்குள் நுழைந்த அந்த மர்ம நபர், நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாகவும், அதன் பின்னர் சூரியின் தரப்பிலிருந்து சூர்ய பிரகாஷ், கீரைத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில்தான் நடிகர் விமல், ஒரு திருமணத்திற்கு சென்ற போது அவருடைய செல்போன் காணாமல் போயிருக்கும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது ‘சண்டைக்காரி’, ‘வெற்றிகொண்டான்’ ஆகிய திரைப்படங்களில் நடிகர் விமல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Also Read: சீரியல் நடிகை ஜெயலக்‌ஷ்மி.. "வட்டி பணம் கேட்டு மிரட்டுறாங்க!!".. சென்னையை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார்!! ஜெயலக்‌ஷ்மி சொன்ன Exclusive விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vimel cellphone theft in marriage விமல் செல்போன் திருட்டு

People looking for online information on Cellphone, Marriage, Soori, Theft, Vimel will find this news story useful.