"உங்க வேலையை நீங்க பாருங்க".. ஷிவினின் கேள்விக்கு விக்ரமனின் மாஸ் ரிப்ளை.. BIGGBOSS.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பிக்பாஸ் வீடு பல வேடிக்கையான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் நிறைந்து கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | முதன்முறையாக தனது குடும்பம் பத்தி உருக்கமாக பேசிய விக்ரமன்.. எமோஷனல் ஆன போட்டியாளர்கள்..!

டைட்டிலை வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்தார் கதிர். 3 லட்ச ரூபாயுடன் அவர் வெளியேற, தற்போது பணப்பெட்டி வீட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. பணப்பெட்டியை யாராவது எடுப்பார்களா? அல்லது தொடர்வார்களா? என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பணப்பெட்டியில் இதுவரையில் 10 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் போட்டியாளர்கள் இதுபற்றி அவ்வப்போது வீட்டுக்குள் பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கார்டன் பகுதியில் மகேஷ்வரி மற்றும் விக்ரமன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஷிவின்,"விக்ரமன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? நான் எடுத்துட்டு வெளியே வந்து தர்றேன்" என்கிறார்.

இதனை கேட்டு சிரிக்கும் விக்ரமன், "எனக்கு எவ்வளவு வேணும்-னு நீங்க ஏங்க கேக்குறீங்க?" என்கிறார். அப்போது ஷிவின்,"உங்களுக்கு யாரும் காசு கொடுக்கல. உங்க Legal Aid -க்காக சொல்றேன். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க. நான் எடுத்துட்டு வெளியே வந்து உங்களுக்கு தர்றேன்" என்கிறார். இதனை கேட்டு சிரிக்கும் விக்ரமன்,"இது என்ன விளையாட்டா? இப்படி பேசுறது. இதை விளையாட்டா நினைச்சிட்டு இருக்காங்க. அப்படி கிடையாது" என்கிறார்.

தொடர்ந்து பேசும் ஷிவின்,"உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க. நான் எடுத்துட்டு போய் வெளியே வெயிட் பண்றேன். நீங்க வந்த உடனே உங்களுக்கு தர்றேன்" என்கிறார். அப்போது, "நீங்க வெளியே வாங்க சொல்றேன். அத நான் சொல்லி பெறக்கூடாது. அது உங்க அன்பால் நீங்க கொடுக்குறது. அக்கறையால் நீங்க கொடுப்பது. சமூக நோக்கத்தால் நீங்க கொடுப்பது" என்கிறார் விக்ரமன்.

அவருக்கு பதில் அளிக்கும் ஷிவின்,"அந்த இடத்துல நான் உங்களை வைக்கல. நானா கொடுக்குற இடத்துல உங்களை வைக்கல. கேட்டு வாங்குற இடத்துல தான் உங்களை வச்சிருக்கேன். நீங்க தாராளமா கேக்கலாம்" என்கிறார். தொடர்ந்து பேசும் விக்ரமன் இது விளையாட்டு அல்ல என்றும், தனக்கு மிகமுக்கியமான ஒன்று எனவும் கூற, தன்னால் முடிந்த பணத்தை கண்டிப்பாக கொடுப்பேன் என ஷிவின் சொல்கிறார். இதனை கேட்ட விக்ரமன் சரி என்றும் இனி அதைப்பற்றி பேசவேண்டாம் எனவும் சொல்கிறார்.

Also Read | Food ஆர்டர் கேட்ட ராபர்ட்.. விக்ரமன் சொன்னதை கேட்டு டக்குன்னு ஷாக் ஆன மாஸ்டர்😂..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman talks to shivin about how much money he needed

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shivin, Vikraman will find this news story useful.