"அந்த விஷயத்துல வெற்றி கிடைக்கல. அதுதான் உண்மை"... மவுனம் கலைத்த விக்ரமன்..BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சமீப நாட்களில் வீட்டுக்குள் முட்டை விவகாரம் பல வாக்குவாதங்களுக்கு வழிவகுத்திருந்தது.

Advertising
>
Advertising

Also Read | "என் அமுது ஒரு கலைஞன்".. அமுதவாணனை கண்கலங்க செய்த பிக்பாஸ்.. நெகிழ்ந்துபோன போட்டியாளர்கள்..!

இந்த விஷயத்தில் அசீம், மணிகண்டா இருவரும் மகேஷ்வரியுடன் வாக்குவாதம் செய்ய விக்ரமன் சமாதானம் செய்ய முற்பட்டார். அப்போது, விக்ரமன் - அசீம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், வீடே சோகமாக காட்சியளித்தது. முன்னதாக, கடந்த வார இறுதியில் கமல்ஹாசன் தோன்றிருந்த நிலையில் ADK வெளியேற்றப்படுவதாக அவர் அறிவித்து இருந்தார்.

இதனையடுத்து, ஆயிஷா மற்றும் ரச்சிதா இருவரும் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். ஒருபக்கம் பணமூட்டையுடன் கதிர் வெளியேறுவதாக அறிவித்தது போட்டியாளர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தது. அதன் பின்னர் பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் முறையாக பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இறுதிவரை சென்ற போட்டியாளர்கள் யார் வேண்டுமானாலும் பணத்துடன் வெளியேறலாம் எனவும் பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இப்படி சுவாரஸ்ய நகர்வுகளுடன் சென்றுகொண்டிருக்கிறது இந்த சீசன்.

இந்நிலையில், விக்ரமன் மற்றும் மகேஷ்வரி இருவரும் கார்டன் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மகேஷ்வரி,"எல்லோரோடையும் அவர் கனெக்ட் ஆகிருக்காரு" என அசீம் பற்றி சொல்கிறார். அப்போது அவருக்கு பதில் அளிக்கும் விக்ரமன்,"இந்த வீட்ல அது நார்மலைஸ் ஆகிடுச்சு. அதுனால தான் நல்ல வேளை இந்த வீடு முடிஞ்சிடுச்சு-ன்னு தோணுது. இது சொசைட்டியா இருக்க கூடாதுன்னு நான் நம்புறேன்" என்கிறார்.

தொடர்ந்து பேசும் மகேஷ்வரி அதற்காக நாம் முயற்சிகள் எடுக்க கூடாதா? என கேள்வி எழுப்புகிறார். அப்போது விக்ரமன்,"இருக்க கூடாதுன்னு நான் விரும்புறேன். அதுக்கு என்ன ஸ்டெப் எடுக்கணுமோ அதை பண்ணவும் செய்வேன். இந்த வீட்ல நம்ம காலம் முடிஞ்சிடுச்சு. இந்த வீட்ல அதை நார்மலைஸ் பண்ண கூடாதுன்னு இறுதிவரை முயற்சி பண்ணோம். அதுல வெற்றி கிடைக்கல. அதுதான் உண்மை. இது சொசைட்டியா மாறிட கூடாதுங்குறது தான் என்னோட கவலை. டைட்டில் ஜெயிக்கிறது மட்டும் இல்ல" என்கிறார்.

மேலும், தனக்கு யாரையும் வெறுக்க தெரியாது எனவும் அவர்களிடம் உள்ள விஷயங்களை சரிசெய்யும்படி தான் கூறும் வழக்கம் கொண்ட ஒரு நபர் என்றும் விக்ரமன் கூறுகிறார். அப்போது விக்ரமன்,"கருத்தியல் ரீதியா எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர் வெற்றிபெறணும்னு தானே இப்படி பண்ணிருக்காரு. அப்படி தான் நான் பார்க்குறேன்" என்கிறார்.

Also Read | "என்னால முடியும்".. Confident-ஆ பேசிய மைனா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் வார்த்தை..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Talks to Mageshwari about Azeem In BiggBoss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Maheshwari, Vikraman will find this news story useful.