'வாத்தி' விக்ரமனையே கண்கலங்க வச்சுட்டாங்கப்பா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் விஷயம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டி முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதாக சொல்லப்படும் நிலையில் பிக்பாஸ் வீடு பல வேடிக்கையான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் நிறைந்து கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும்".. பிக்பாஸ் சொன்ன வாழ்த்து.. உடைந்து அழுத அசீம்..!

Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணப்பெட்டியை யாராவது எடுப்பார்களா? அல்லது அனைவரும் தொடர்வார்களா? என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கம் விக்ரமன், அசிம், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் ஆகியோர் Finale-வுக்கு முன்னேறி உள்ள நிலையில், இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றியும் தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க, பிக்பாஸ் வீட்டினுள் பல நெகிழ்ச்சிகர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வீட்டினுள் இந்த போட்டியாளர்களின் பிக்பாஸ் அனுபவங்களை காட்சிப்படுத்தும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றிய காணொளியும் திரையிடப்படுகிறது. இதனையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார். முன்னதாக அமுது, ஷிவின் மற்றும் மைனா ஆகியோர் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொருட்களை ஆச்சர்யத்துடன் பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விக்ரமன் அவருடைய பிக்பாஸ் அனுபவங்களை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு விக்ரமன் நெகிழ்ந்து போய் நிற்க, "சக மனிதரை மதிக்க தெரிந்த தோழரை அடையாளம் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி" என பிக்பாஸ் சொல்கிறார். இதனை கேட்டதும் விக்ரமன் கண்ணீர் சிந்துகிறார்.

அப்போது பேசும் விக்ரமன்,"தமிழ்நாட்டின் மிக பிரம்மாண்ட ஷோ என்பதையும் தாண்டி ரொம்ப ரொம்ப தேவையான ஷோ-வா பிக்பாஸ் இருக்கு. ஜனரஞ்சகமான மேடையில எளிய குரல்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கீங்கன்னா இது ஒரு சாதாரண விஷயம் இல்ல. இது ஒரு புரட்சி" என்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,"இது என்ன புரட்சி, நீங்க வெளி உலகத்துக்கு போய் செய்யப்போற புரட்சிகளை பார்க்குறதுக்கு நான் ரொம்ப ஆவலா இருக்கேன்" என்கிறார். இதனை கேட்ட விக்ரமன் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கைகூப்பி வணக்கம் சொல்கிறார். பின்னர் கையை மேலே உயர்த்தி "அறம் வெல்லும்" என புன்னகையுடன் விக்ரமன் கூறுகிறார்.

Also Read | “தம்பி நீ படிக்கிற பையன்”.. கலாய்த்த அமுதுவுக்கு விக்ரமனின் Thug Life பதில்.!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman in Tears after BiggBoss Congratulate for his future

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.