பிக்பாஸ்ல இப்படி நடந்தது எங்களுக்கு வேதனையா இருந்தது.. முதல்முறை உடைத்த விக்ரமன் தந்தை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சுமார் 106 நாட்கள் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்திருந்தது. முந்தைய சீசன்களை போல இந்த முறையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

                                             Image Credit : vijay television

Also Read | பாரதி கண்ணம்மா சீசன் 2 -ல் ஹீரோவாக நடிக்கிறாரா பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ..?

மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், இதிலிருந்து 3 பேர் Finale விற்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதி சுற்றில் இருந்த சூழலில், யார் வெற்றி பெறுவார் என்ற விறுவிறுப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.

இதனையடுத்து, அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

Image Credit : vijay television

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்தும் பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில், Behindwoods நடத்திய "மக்களுடன் விக்ரமன்" என்ற நிகழ்ச்சியில் விக்ரமன் கலந்து கொண்டிருந்தார். டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது.

தொடர்ந்து, Behindwoods நிகழ்ச்சியில் விக்ரமன் வருகை தந்த போது, அங்கிருந்த பார்வையாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போது விக்ரமனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Image Credit : vijay television

அப்போது பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோரிடையே நடந்த சண்டை குறித்தும் அந்த தருணங்கள் வேதனையாக இருந்ததா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோரிடையே நடந்த சண்டை குறித்தும் அந்த தருணங்கள் எப்படி இருந்தது என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விக்ரமனின் தந்தை, "நாங்க சாதாரண ஆடியன்ஸ் தான்மா. எல்லார் மாதிரி தான். எங்களுக்கும் வேதனையா இருந்துச்சு. சொல்லப் போனா அதுதான். ஆனா, அதை (விக்ரமன்) அவரு Manage பண்ணாரு பாருங்க, அதுனால தான் அவரு அங்க உக்காந்துட்டு இருக்காரு. நான் இங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேன்" என கூறினார்.

தொடர்ந்து, Finale வில் வெற்றியாளார் அறிவித்த தருணத்தை அப்படி தான் எதிர்பார்த்தீர்களா என கேட்க, இதற்கு பதிலளித்த விக்ரமனின் தந்தை, "அதை எதிர்பார்க்கல. நான் மேடையிலேயே சொல்லி இருந்தேன். ரெண்டு கையுமே கமலோட கை தான். Left-u கையும் தனியா இருக்கல. Right-ம் தனியா இருக்கல. வணக்கம் சொல்லணும்ன்னா கூட ரெண்டையும் சேர்த்து தான் சொல்லுவாரு. அப்படி அவரு உயர்த்துனத தான் அப்படி நெனச்சுக்குறேன்" என தெரிவித்தார்.

Also Read | "விக்ரமன் உங்க வீட்டு புள்ளையா?, தமிழ்நாட்டோட புள்ளையா?".. அப்பா சொன்ன அசர வைக்கும் பதில்!!

பிக்பாஸ்ல இப்படி நடந்தது எங்களுக்கு வேதனையா இருந்தது.. முதல்முறை உடைத்த விக்ரமன் தந்தை..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman father about son clash with azeem in bigg boss

People looking for online information on Azeem, Vikraman, Vikraman Father will find this news story useful.