“உங்களுக்காக 3 மணி நேரம் ஆட்டுக்கல் ஆட்டிக் கொடுத்தேன்” .. சாந்தியிடம் கொதித்த விக்ரமன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | செல்ஃபி படத்துக்கு பின் மீண்டும் இணையும் GV பிரகாஷ் & GVM .. வெளியான பரபர டீசர்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது சண்டை , சச்சரவுகள் , கலவரங்கள், களேபரங்கள் அனைத்துமே சூடுபிடித்து இருக்கின்றன. குறிப்பாக அசீம் - விக்ரமன் மோதல், தனலட்சுமி - அசல் கோலார் மோதல், ஆயிஷா - அசீம் மோதல் என பலவிதமான மோதல்கள் உருவெடுக்கின்றன.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து போட்டியாளர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். பிக்பாஸ் வீட்டுக்குள் சிறைக்கு போகக்கூடிய போட்டியாளரை மற்றவர்கள் நாமினேட் செய்ய வேண்டும். இது குறித்த டாஸ்கில்தான், போட்டியாளர் விக்ரமன் பொங்கி எழுந்திருக்கிறார். அவர் பேசும் பொழுது,  “எதன் காரணமாக நான் வேலை செய்யவில்லை என்று சொல்வீர்கள்.? எப்படி சொல்வீர்கள்.? இரண்டு நாள் உடம்பு முடியாமல் படுத்துக் கொண்டேன்.. அவ்வளவுதான்.. மற்றபடி நீங்கள் பாத்ரூம் போகிறீர்கள்.. கமகமவென்று இருக்கிறது என்றால் அதற்கு நாங்களும் காரணம். என்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவருடனும் நான் பேச தான் முயற்சிக்கிறேன். நீங்கள்தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு போகிறீர்கள். கண்ணோடு கண் பார்த்து பேச மாட்டேன் என்கிறீர்கள். அப்படியும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து உங்களிடம் பேச வருகிறேன். அதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? அப்படி தன்மானத்தையும் சுயமரியாதையும் இழந்து உங்களிடம் எல்லாம் பேச வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை. நான் வேலை செய்யவே இல்லை என்று நீங்கள் யாரும் சொல்ல முடியாது. உங்களுக்கு ஏன் அவ்வளவு வன்மம்? அவ்வளவு காழ்ப்புணர்ச்சி?” என்று வெடித்திருக்கிறார்.

அதன் பின்னரும் பேசியவர், அதன் பிறகு சாந்தியை பார்த்து பேசிய விக்ரமன், “இதெல்லாம் கூட பரவாயில்லை.. சாந்தி அவர்களுடன் நான் வேலை செய்தேன். ஆனால் வேலையை செய்யவில்லை என்று சொல்கிறார். பரவாயில்லை” என்று சொல்கிறார். அதற்கு சாந்தியும், “நான் எல்லாரையும் பொதுவாக தான் சொன்னேன். அனைவரையும் கம்பேர் பண்ணும்போது ஒட்டுமொத்தமாக உங்களை வேலை செய்யவில்லை என்று கூறினேன், அவ்வளவுதான்.” என்று சொல்ல, மீண்டும் வெடித்த விக்ரமன், “ஆமாம்.. இப்போது நான் கிச்சன் டீமிலேயே இல்லை.. ஆனால் என்னை அழைத்து சுடுதண்ணி வைக்க சொல்லி கேட்டீர்களே.. எதனால் ? ஏனென்றால், நான் உங்களிடம் நின்று வேலை செய்து இருக்கிறேன், காய்கறி கட் பண்ணி கொடுத்து இருக்கிறேன், அதனால் தான் என்னை கூப்பிட்டீர்கள். உங்களுக்கு நான் ஆட்டுக்கல்லில் 3 மணி நேரம் ஆட்டிக் கொடுத்திருக்கிறேன்.. ஆனால் கொஞ்சம் கூட வேலையை செய்யவில்லை என்று சொல்கிறீர்களே?” என்று கொதித்தார். இதில் மிகவும் கோபமாக ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியதை  அதற்கான ரியாக்ஷனுடன் விக்ரமன் பேசினார். 

முன்னதாக தனலட்சுமியிடம் அசல் கோலார் விஷயத்தில் என்ன நடந்தது என்று விக்ரமன் கேட்க போக அப்போது அசீம் தடுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் வந்தது. இதை தடுக்கப்போன ஜிபி முத்துவுக்கும் விக்ரமனுக்கும் வாக்குவாதம் நடந்தது. இந்நிலையில்  பிக்பாஸ் போட்டியாளர்களிடையே விக்ரமன் பேசிய இந்தப் பேச்சு மிக அதிர்வை ஏற்படுத்தியது.

Also Read | “ஏன் அவ்வளவு வன்மம்.. காழ்ப்புணர்ச்சி..?” - விமர்சனங்களுக்கு எதிராக பொங்கி எழுந்த விக்ரமன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman defand to shanthi in ranking task bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janany, Ram ramaswamy, Vijay tv will find this news story useful.