"ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது".. சைலண்டா கணக்கு போட்ட விக்ரமன்.. ஒரே லைன்ல THUG LIFE பண்ண ராம் 😂!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | அதிர்ச்சி!! பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி திடீர் மரணம்..!

பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதில் கடந்த வாரம் நடந்து முடிந்த ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் கூட நிறைய கலவரங்கள் வெடித்திருந்தது.

அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோர் சண்டை போட்டுக் கொண்டது, பழங்குடி அணிக்குள்ளேயே உருவான சண்டை சச்சரவுகள், இரவில் பூ திருடியதாக அசீம் மீது எழுந்த குற்றச்சாட்டு என ஏராளமான விஷயங்கள் பெரிய அளவில் பேசு பொருளாகவும் மாறி இருந்தது. அதே போல, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் விளையாடும் விதம் குறித்தும் நிறைய கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டும் வருகிறது. இது தொடர்பாக, போட்டியாளர்கள் மத்தியில் நிறைய கருத்துக்களையும் கமல்ஹாசன் உரையாடி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார். அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் அரங்கேறி வரும் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து குறைவான சண்டைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக உள்ளது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்து இருக்கிறது. எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் அது. கதிரவன், ரச்சிதா, ஜனனி, தனலட்சுமி, அசீம் உள்ளிட்ட பல போட்டியாளர்களின் நடனமும் அதிக கவனம் ஈர்த்திருந்தது.

மேலும், இதில் சிவாஜி கணேசனின் வக்கீல் கதாபாத்திரத்தில் அசீமும், வடிவேலுவின் கான்டராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் தனலட்சுமியும், மன்மதன் சிம்புவாக ஆயிஷாவும், அந்நியன் விக்ரமாக விக்ரமனும், முதல்வன் ரகுவரன் கதாபாத்திரத்தில் ராமும், நாய் சேகர் வடிவேலுவாக மைனா நந்தினியும் என ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு சினிமா கதாபாத்திரங்கள் போல பிக்பாஸ் வீட்டில் உலா வருகின்றனர்.

இதற்கு மத்தியில், விக்ரமன் மற்றும் ராம் ஆகியோர் இடையே நடந்த உரையாடல் குறித்த விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ராமிடம் பேசும் விக்ரமன், "எனக்கு ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது" என கூறியதும் என்ன தப்பு என ராம் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் விக்ரமன், "Buzzer அடிச்சாலும் தனக்கு ஃபேவரைட் ஆன ஆள மட்டும் தான் கூப்பிடுறாங்க" என கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து பேசும் ராம், "தம்பி இது இந்த டாஸ்க்ல இல்லப்பா. கடைசி 7 வாரமா இதான் நடந்துட்டு இருக்கு. அவங்க ஃப்ரண்ட்ஸ்க்கு மட்டும் Best Performer குடுக்குறாங்க. அவங்களே எல்லாத்தையும் வாங்கிட்டு போயிடுறாங்க. அத பத்தி கேட்க சரியான வாய்ப்பு இது" என்றும் தெரிவிக்கிறார்.

Also Read | "நீங்க இல்லா வாழ்க்கை".. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' சேதுராமன் குறித்து அவரது மனைவி உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and ram discussing about contestants in bigg boss house

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Ram, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.