"அவரு ஏத்தி விடுறாரு, நீங்க வார்த்தைய விடாதீங்க விக்ரமன்".. ஆவேசமான மகேஸ்வரி.. பரபர BIGGBOSS வீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | குயின்ஸி டவல்ல தொடங்குன பிரச்சனை.. கோபத்தில் காபி கப்பை உடைத்த ஜனனி.. என்ன நடந்தது?

எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு சண்டைகள் அல்லது பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும்.

இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர். முன்னதாக, முதல் இரண்டு வாரம் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த ஜிபி முத்து, தனது மகன் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து இருக்க முடியாது என கூறி சுய விருப்பத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சாந்தியும் எலிமினேட் செய்யப்பட கடைசி வாரத்தில் அசல் கோலாரும் எலிமினேட்  செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இந்த நிலையில், அசீம், விக்ரமன் மற்றும் மகேஸ்வரி ஆகியோரிடையே விவாதம் நடந்தது தொடர்பான விஷயம் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது டிவி டாஸ்க் நடைபெற்று வருகிறது. அப்போது விக்ரமன் பேசியது கேட்கவில்லை என ஜட்ஜாக இருக்கும் மகேஸ்வரி முறையிடுகிறார். இது தொடர்பாக விக்ரமன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் தொடர்ந்து விளக்கம் கொடுத்து கொண்டே இருந்தாலும் டாஸ்க்கின் போது அப்படி எதுவும் அவர்கள் தெளிவாக சொன்னதாக தனக்கு கேட்கவில்லை என்பதில் மகேஸ்வரி உறுதியாக இருக்கிறார். அதே வேளையில், அசீம் உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களுக்கு விளங்கியதையும் குறிப்பிடுகின்றனர்.

தொடர்ந்து பேச்சு வளர்ந்து கொண்டே போக, அசீம் குறித்து பேச அமுதவாணன் முற்படுகிறார். அப்போது பதில் பேசும் மகேஸ்வரி, "அசீம் இல்லங்க, நான் தான் ஜட்ஜ். யாருங்க அசீம் முடிவு பண்றதுக்கு?" என கேட்கிறார். இதனை கேட்டதும் அசீம் யாருன்னு எதுக்கு கேக்குறீங்க என அசீம் கூற, "நீங்கள் உங்கள் Opinion தான் கொடுக்க முடியும். முடிவு பண்ண முடியாது. அசீம வெச்சு பேசாதீங்க" என்றும் மகேஸ்வரி தெரிவிக்கிறார்.

இதன் பிறகு, அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் முறையிட இந்த விவகாரம் சக போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருந்தது. அப்படி ஒரு சூழலில் தற்போது இதே விவகாரத்தின் பெயரில் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி விவாதம் செய்த விஷயம், இன்னும் விறுவிறுப்பை எகிற வைத்துள்ளது.

"Motive-ஓடயா Judgement குடுப்பாங்க. அப்புறம் ஜட்ஜ்ன்னு எதுக்கு பேரு?" என விக்ரமன் கேட்கிறார். பின்னர், "அவரு (அசீம்) ஏத்தி விடுறாரு, நீங்க தேவை இல்லாம வார்த்தைய விடாதீங்க விக்ரமன்" என மகேஸ்வரி கேட்கிறார். அசீம் ஏத்தி விடவில்லை என்பதை விக்ரமன் சொல்ல முற்பட, "ஃபர்ஸ்ட் டேல இருந்து நான் எந்த Motive'ல இருக்குறேன், எந்த Motive-ல இல்லன்னு வெளிய மக்களுக்கு தெரியும். நான் அவ்வளவு Pureஆ judgement பண்ணி இருக்கேன்" என மகேஸ்வரி தனது தரப்பிலான கருத்தை சொல்கிறார்.

இதே போல வேறொரு சமயத்தில், "Judgement பண்றவங்க Reasoning கரெக்ட்டா குடுக்கணும் மகேஸ்வரி" என விக்ரமன் சொல்ல, "நான் தப்பா இருந்தா தப்புன்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க, நான் ரைட்டுன்னு இன்னும் நான் நிக்குறேன்" என மகேஸ்வரி சொல்கிறார். இறுதியில், "உங்களுக்கு எல்லாமே தெரியும்மா. நமக்கு தெரியாதுல்ல விட்டுருங்க" என்கிறார் அசீம்.

Also Read | VIDEO : குயின்ஸி போல் அழுத ஜனனி .. "அழுகாத ஜனனி".. அழகா சமாளிச்ச தனலட்சுமி😂 bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and maheswari in debate about judgement in task

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Maheswari, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.