"அதை கவனிக்க தவறிட்டோமா?".. அசீம் பத்தி விக்ரமனுக்கு வந்த சந்தேகம்.. மகேஷ்வரி சொன்ன விஷயம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | THUNIVU: மகனுடன் பிரபல தியேட்டரில் 'துணிவு' படம் பார்த்த ஆந்திரா அமைச்சர் ரோஜா.. வைரல் புகைப்படம்!

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ரச்சிதா, ஆயிஷா ஆகியோர் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களாக வலம் வந்த இவர்கள் இருவரையும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் மிக உற்சாகமாக வரவேற்றிருந்தனர். அதிலும் ரச்சிதாவுக்கு மிகவும் நெருங்கிய தோழியான ஷிவின் அவரை கட்டியணைத்து கண்கலங்கியது பலரையும் மனம் உருக வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் முட்டை விவகாரம் குறித்து போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. மகேஷ்வரியுடன் அசீம் மற்றும் மணிகண்டா பேச, பின்னர் அது வாக்குவாதமாகிவிட்டது. இதனிடையே விக்ரமன் - அசீம் இடையே வாக்குவாதம் நடைபெற சக போட்டியாளர்கள் இருவரையும் சமாதானம் செய்திருந்தனர். இப்படி சூழ்நிலையில், மகேஷ்வரி மற்றும் விக்ரமன் இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது மகேஷ்வரி,"போட்டியில இப்படித்தான் ஜெயிக்கணும்னு சில விஷயங்கள் இருக்கும். எப்படி வேணும்னாலும் ஜெயிக்கலாம்-னு சில விஷயங்கள் இருக்கும்" என்கிறார். அவருக்கு பதில் சொல்லிய விக்ரமன்,"அவரோட கேம் பிளே ஒருவேளை நம்ம பார்க்கவில்லையா? அப்படி ஏதாவது இருக்கா?" கேட்கிறார். உடனே,"அது பெர்ஃபாமென்ஸ். கேம் பிளே கிடையாது. ஒருவேளை மக்களுக்கு அவரோட பெர்ஃபாமென்ஸ் பிடிச்சு இருந்திருக்கலாம். அப்படின்னு தான் நான் நினைக்கிறேன்" என்கிறார்.

Also Read | பிக்பாஸ்-ல இருந்து வெளியேறும்போது கதிர் சொன்ன வார்த்தை.. கலங்கிப்போன போட்டியாளர்கள்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman and Mageshwari Talks about Azeem Game Play

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Maheshwari, Vikraman will find this news story useful.