"அவரு ஒரு VICTIM, ஏன் அப்டி பேசுனாருன்னு".. வெளிய வந்த பின் அசிம் பத்தி பேசிய விக்ரமன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் சமீபத்தில் மிக அசத்தலாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | ஷாருக்கான் நடித்த 'பதான்'.. இந்தி சினிமா வரலாற்றில் முதல்நாளிலே அதிக வசூல்! இத்தனை கோடியா?

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இதனையடுத்து, ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறிய வண்ணம் இருக்க, பல விறுவிறுப்பான சம்பவங்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறி இருந்தது.

அப்படி இருக்கையில், மொத்தம் 21 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் ஃபினாலே சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறியதையடுத்து, யார் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார் என்பதை பற்றி பலரும் பல விதமான கருத்துக்களையும் குறிப்பிட்டு வந்தனர். இதில் ஷிவின் மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேற, அசிம் டைட்டில் வின்னராகவும் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மறுபக்கம் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரமன், இரண்டாவது இடம் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

106 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக வலம்வந்து நல்ல புகழையும் பெற்ற விக்ரமன், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர், மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கும் பிரத்யேக பேட்டி ஒன்றை விக்ரமன் அளித்துள்ளார். இதில் தன்னுடன் ஆடிய சக போட்டியாளர்கள் குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனக்கு கிடைத்த மக்களின் ஆதரவு குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், அசிம் போன்ற ஒரு நபர் வெற்றி பெற்றது குறித்து தன்னுடைய நிலைப்பாடு பற்றியும், சக போட்டியாளர்கள் குறித்தும் என பல்வேறு கருத்துக்களையும் விக்ரமன் பகிர்ந்து கொண்டார். அதேபோல அசிமுடன் தனக்கு அடிக்கடி நடந்த வாக்குவாதங்கள், விவாதங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய நெறியாளர், அதிகம் அந்த இடத்தில் நீங்கள் கர்ஜனை செய்திருந்தால் உங்களுடைய வாய்ப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்குமா என்ற கேள்வி விக்ரமன் முன் எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்தவர், "அவர ஒரு Victim ஆ தான் நான் பார்த்தேன். அவர் எதுக்காக அந்த மாதிரி பேசினார் என்றெல்லாம் அவருக்கு தான் வெளிச்சம். எனக்கு அது இப்ப வரைக்கும் பிடிபடல. ஆனா அவரை ஒரு Victim ஆ நான் பாத்தேன். அவர் மேல எனக்கு கோபம் கிடையாது. அவர் பேசிய கருத்துக்கள் தவறுன்னு நான் சுட்டிக்காட்ட முயற்சி பண்ணேன். 15 வாரமுமே நான் வந்து சலிக்காமல் அதை சுட்டிக்காட்ட முயற்சி பண்ணுனேன். அதுனால கர்ஜனை அவர்கிட்ட வர வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா அவரு எதனால பண்றாருன்னு தெரியலங்குற போது அவர் மேல நம்ம வந்து கர்ஜனை வர வைக்க முடியாது.

ஒரு நபர் இத்தனை கேமராக்கள் தன்னை சூழ்ந்து இருக்கும் போது தன்னை இப்படி வெளிப்படுத்துகிறார் அப்படின்னா அது ஏதோ ஒரு விஷயத்துக்காக தானே அப்படி பண்றாரு. அப்படித்தான் அது இப்போ வரைக்கும் பார்க்கிறேன்" என தெரிவித்தார். அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்களிப்பது குறித்தும் தேர்தலில் வாக்களிப்பதற்கு இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றியும் தனது விளக்கத்தை விக்ரமன் வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read | பிரபல மலையாள நடிகருடன் சூர்யா - ஜோதிகா... இணையத்தை கலக்கும் புகைப்படம்

"அவரு ஒரு VICTIM, ஏன் அப்டி பேசுனாருன்னு".. வெளிய வந்த பின் அசிம் பத்தி பேசிய விக்ரமன்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman about azeem game inside bigg boss house

People looking for online information on Azeem, Vikraman, Vikraman about azeem game will find this news story useful.