"விளம்பரத்துக்காக பண்ணி இருக்காரு".. வெளியே வந்தபின் அசிம் பற்றி முதல்முறையாக பேசிய விக்ரமன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | "இனிமே சிவாங்கி செஃப் போல?".. புது கெட்அப்பில் வந்த கோமாளி?.. குஷியான குக் வித் கோமாளி செட்

இந்த நிகழ்ச்சியில், முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், ஒவ்வொரு எபிசோடும் மிக விறுவிறுப்பாக சென்றதால் பார்வையாளர்களும் மிகவும் ரசித்தபடி இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வந்தனர்.

முந்தைய சீசன்களைப் போல இந்த பிக்பாஸ் சீசனும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பும் முதல் வாரத்தில் இருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.

அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேர் ஃபினாலேவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். பிக் பாஸ் Finale ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக செல்ல இதன் இறுதியில் வெற்றியாளர் யார் என்பதை கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி அசிம் 6 ஆவது பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட, இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஷிவின் பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருந்த விக்ரமன், தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது லைவிலும் தோன்றி இருந்த விக்ரமன், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தன்னுடன் ஆடிய போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதே போல, மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த எதிர்பாராத ஆதரவு, தன்னை சற்று எமோஷனல் ஆக்கி இருந்ததாகவும் விக்ரமன் கூறி உள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசிம் குறித்து விக்ரமன் பேசியுள்ள கருத்துக்களும் அதிக கவனம் பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோரிடையே பல்வேறு வாக்குவாதங்கள் மற்றும் விவாதங்கள் அரங்கேறி உள்ளது.

இதனிடையே, தற்போது லைவில் அசிம் பற்றி சில வார்த்தைகளில் குறிப்பிட்டு பேசிய விக்ரமன், "விளம்பரத்துக்காக ஏதோ பண்ணி இருக்காரு பார்ப்போம்" என தெரிவித்தார். இன்னும் தொடர்ந்து அசிம் குறித்து பேசி இருந்த விக்ரமன், "அவர்கிட்ட நிறைய நல்ல விஷயங்கள் இருந்ததுனால தான் மக்களுக்கு அவரையும் புடிச்சிருந்தது. அவருக்கும் என்னுடைய பெரிய வாழ்த்துக்களை சொல்லிக்குறேன். அவரோட பரிசு தொகையிலிருந்து 25 லட்ச ரூபாய் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகையா கொடுக்கிறதா சொல்லிருந்தாரு, ரொம்ப நல்ல விஷயம். நான் அதை வரவேற்கிறேன், பாராட்டுறேன்" என விக்ரமன் கூறியுள்ளார்.

Also Read | "எல்லார் மனசுலயும் நின்னுட்டீங்க".. வெளிய வந்த ஷிவினுக்கு பிரம்மாண்ட Surprise கொடுத்த ரச்சிதா!!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman about azeem for first time after bigg boss

People looking for online information on Azeem, Vikraman, Vikraman about azeem will find this news story useful.