COBRA: "இங்கு இவரை யான் பெறவே.." - திருச்சியில் ரசிகர்களை சந்தித்த பின் விக்ரம் பதிவிட்ட ட்வீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் தற்போது 'கோப்ரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் இவர்களுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக ரசிகர்களை சந்திக்கும் விதமாக நடிகர் விக்ரம் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு அங்கமாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் செயிண்ட் ஜோசப் கல்லூரி நிகழ்வில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவருடன் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் உருவம் வரைந்த ஓவியத்தை கல்லூரி மாணவர்கள் சியான் விக்ரமுக்கு பரிசாக அளித்தனர் அந்த சமயத்தில் அங்கு கூடி இருந்த ரசிகர்கள் மத்தியில் நடிகர் விக்ரம் தான் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு அவருடைய ட்விட்டரில், “இன்று கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அதே வேளையில் சில விரும்பதகா சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.” என்று விக்ரம் பதிவிட்டுள்ளார்.

கோப்ரா திரைப்படம், வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vikram, Cobra

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Viral tweet after meeting fans in trichy for Cobra

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.