VIDEO: "யாருமே இல்லங்குற ஃபீல் வரும்!".. இந்த பொண்ணா இப்படி கண்கலங்குது?.. உருகிய பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி முரட்டு சிங்கிள்.

ஜாலியான மற்றும் நகைச்சுவை கலந்த கலாட்டாவான இந்த ரியாலிட்டி ஷோவில் விஜய் நட்சத்திரங்கள் பங்கேற்பது உண்டு. அதில், விஜேவும், விஜய் டிவியின் தேன்மொழி சீரியலின் நாயகியுமான ஜாக்குலின் தமது சில உணர்வுகளை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

அதில், ஒரு பெர்ஃமார்மென்ஸை பார்த்துவிட்டு தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட ஜாக்குலின், அந்த கான்செப்ட் தன் வாழ்க்கைக்கு நெருக்கமானதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் குழந்தையில் இருந்தே தனக்கு யாருமே இல்லாத ஃபீலிங் தனக்கு இருந்ததாகவும், அதனாலேயே இப்போது யாரிடம் பேசினாலும் மகிழ்ச்சியாக பேசுவதாகவும் அழுத தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கேட்ட சக நட்சத்திரங்கள் அனைவரும் மனமுருகி, “நாங்கெல்லாம் இருக்கோம்” என ஜாக்குலினிடம் ஆறுதல் கூறினர். யாஷிகா ஆனந்த் மற்றும் கேபி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் எழுந்து சென்று அழுத் தொடங்கிய ஜாக்குலினை கட்டிக்கொண்டனர்.

ALSO READ: நீண்ட இடைவெளிக்கு பின் 'பிரம்மாண்ட வரலாற்று தமிழ் படத்தில்' இணையும் மல்லிகா ஷெராவத்!

Vijay Tv Jacquline Cries Murattu Single ஜாக்குலின் விஜய் டிவி

People looking for online information on VijayTelevision will find this news story useful.