“விஜய் சேதுபதி & நயன்தாராவை” அன்பால் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்!.. எங்க தெரியுமா? VIDEO

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா பாண்டிச்சேரிக்கு வந்துவிட்டு காரில் ஏறச் செல்லும்போது ரசிகர்கள் ஆர்ப்பரித்து தங்கள் அன்பை வெளிப்படுத்திய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை நயன்தாராவும் சரி, நடிகர் விஜய் சேதுபதியும் சரி இருவருமே ரசிகர்களுக்கு வணக்கம் சொல்லியும், கை காட்டியும், விடைபெற்று காரில் ஏறிச் சென்றனர்.

நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் தற்போது ஹாட் ஸ்டாரில் வெளியாகி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே விக்னேஷ் சிவனுடான நிச்சயதார்த்த மோதிரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதேபோல் விஜய் சேதுபதி கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கும் நிலையில் சன் டி.வியின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷூட்களில் பிஸியாக இருந்து வந்ததை காண முடிந்தது.

“விஜய் சேதுபதி & நயன்தாராவை” அன்பால் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்!.. எங்க தெரியுமா? VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi nayanthara shooting video விஜய் சேதுபதி நயன்தாரா

People looking for online information on Fans, Kaathuvaakula Rendu Kaadhal, Nayanthara, Samantha, Trending, Video, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.