''நயன்தாராவும் நானும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க காரணம்...'' - மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'போடா போடி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். அடுத்ததாக அவர் இயக்கிய 'நானும் ரௌடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து அவர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் ''காத்து வாக்குல ரெண்டு காதல்'' படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வருடம் வெளியாகியது. இந்நிலையில் அவரது படங்கள் நயன்தாராவுடனான திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து Behindwoods TV-க்கு பிரத்யேக பேட்டியில் மனம் திறந்தார்.

அப்போது நயன்தாராவுடனான திருமணம் குறித்து கேட்டபோது, ''எங்களுக்கென தனித்தனியாக லட்சியங்கள், கனவுகள் இருக்கு. அது எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு தான் பெர்சனல் வாழ்க்கையை பற்றி யோசிக்க முடியும். அப்றோம் லவ் எப்ப போரடிக்குதுனு பார்க்கலாம். அதுக்குனு ஒரு டைம் வரும் அப்போ எல்லாருக்கும் சொல்லி பண்ணுவோம்'' என்றார்.

''நயன்தாராவும் நானும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க காரணம்...'' - மனம் திறக்கும் விக்னேஷ் சிவன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivn opens up about marriage with Nayanthara in exclusive interview | நயன்தாராவுடனான திருமணம் குறித்து மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.